Thursday, December 04, 2014
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரே நாளில், கோர்ட்டுகளில் ‘‘மெகா லோக் அதாலத்’’ எனப்படும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்த லட்சக்கணக்கான வழக்குகளுக்கு அப்போது தீர்வு காணப்பட்டது. நடப்பாண்டில் வருகிற 6–ந் தேதி(சனிக்கிழமை) நாடு முழுவதும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் கடந்த ஆண்டு மக்கள் நீதிமன்றம் மூலம் 13 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொலைத்தொடர்பு துறை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து மற்றும் நஷ்ட ஈடு வழக்குகள், கொலை, கொள்ளை பாலியல் பலாத்காரம் அல்லாத குற்ற வழக்குகளுக்கு இந்த நிகழ்ச்சியில் தீர்வு காணப்பட உள்ளன. இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு நீதிபதிகள், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை, வங்கி அலுவலர்கள், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள், வக்கீல்கள் ஆகியோருடன் மாவட்ட நீதித்துறை நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் போது, வருகிற 6–ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடக்க உள்ள மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண்பதற்கு உரிய வழக்குகளை தயார்படுத்தவும், இந்த ஆண்டு 15 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment