Thursday, December 04, 2014
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரே நாளில், கோர்ட்டுகளில் ‘‘மெகா லோக் அதாலத்’’ எனப்படும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்த லட்சக்கணக்கான வழக்குகளுக்கு அப்போது தீர்வு காணப்பட்டது. நடப்பாண்டில் வருகிற 6–ந் தேதி(சனிக்கிழமை) நாடு முழுவதும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் கடந்த ஆண்டு மக்கள் நீதிமன்றம் மூலம் 13 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொலைத்தொடர்பு துறை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து மற்றும் நஷ்ட ஈடு வழக்குகள், கொலை, கொள்ளை பாலியல் பலாத்காரம் அல்லாத குற்ற வழக்குகளுக்கு இந்த நிகழ்ச்சியில் தீர்வு காணப்பட உள்ளன. இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு நீதிபதிகள், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை, வங்கி அலுவலர்கள், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள், வக்கீல்கள் ஆகியோருடன் மாவட்ட நீதித்துறை நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் போது, வருகிற 6–ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடக்க உள்ள மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண்பதற்கு உரிய வழக்குகளை தயார்படுத்தவும், இந்த ஆண்டு 15 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment