Thursday, December 04, 2014
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரே நாளில், கோர்ட்டுகளில் ‘‘மெகா லோக் அதாலத்’’ எனப்படும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்த லட்சக்கணக்கான வழக்குகளுக்கு அப்போது தீர்வு காணப்பட்டது. நடப்பாண்டில் வருகிற 6–ந் தேதி(சனிக்கிழமை) நாடு முழுவதும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் கடந்த ஆண்டு மக்கள் நீதிமன்றம் மூலம் 13 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொலைத்தொடர்பு துறை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து மற்றும் நஷ்ட ஈடு வழக்குகள், கொலை, கொள்ளை பாலியல் பலாத்காரம் அல்லாத குற்ற வழக்குகளுக்கு இந்த நிகழ்ச்சியில் தீர்வு காணப்பட உள்ளன. இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு நீதிபதிகள், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை, வங்கி அலுவலர்கள், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள், வக்கீல்கள் ஆகியோருடன் மாவட்ட நீதித்துறை நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் போது, வருகிற 6–ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடக்க உள்ள மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண்பதற்கு உரிய வழக்குகளை தயார்படுத்தவும், இந்த ஆண்டு 15 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...

0 comments:
Post a Comment