Thursday, December 04, 2014
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரே நாளில், கோர்ட்டுகளில் ‘‘மெகா லோக் அதாலத்’’ எனப்படும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. கோர்ட்டுகளில் நிலுவையில் இருந்த லட்சக்கணக்கான வழக்குகளுக்கு அப்போது தீர்வு காணப்பட்டது. நடப்பாண்டில் வருகிற 6–ந் தேதி(சனிக்கிழமை) நாடு முழுவதும் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் கடந்த ஆண்டு மக்கள் நீதிமன்றம் மூலம் 13 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், தொலைத்தொடர்பு துறை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து மற்றும் நஷ்ட ஈடு வழக்குகள், கொலை, கொள்ளை பாலியல் பலாத்காரம் அல்லாத குற்ற வழக்குகளுக்கு இந்த நிகழ்ச்சியில் தீர்வு காணப்பட உள்ளன. இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டு நீதிபதிகள், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை, வங்கி அலுவலர்கள், காப்பீட்டு நிறுவன பிரதிநிதிகள், வக்கீல்கள் ஆகியோருடன் மாவட்ட நீதித்துறை நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் போது, வருகிற 6–ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடக்க உள்ள மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண்பதற்கு உரிய வழக்குகளை தயார்படுத்தவும், இந்த ஆண்டு 15 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...

0 comments:
Post a Comment