Tuesday, December 30, 2014
திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் ராமலிங்க அடிகளாரின் 192–வது ஆண்டு விழா மற்றும் சன்மார்க்க சங்கத்தின் 77–வது ஆண்டு விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தலைவர் சித்ரா ராமசாமி தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். வடலூர் கருணை இல்ல நிர்வாகத் தலைவர் சுப்பிரமணியம், பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி அளவில் மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி அளவில் குளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அமர்நாத், முத்தணம்பாளையம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி மாணவி பூரணி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சவுந்தரியா ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர்.
அதே போல கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டியில் கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரி மாணவி வித்யா, திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் கல்லூரி மாணவர் ஆதித்யா விக்னேஷ் ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முடிவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், யோகா, வாத்திய கருவிகள் இசைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட திருக்குறள், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள் ஆகியவை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் பேராசிரியர் புருசோத்தமன், டிட்டோனி முத்துசாமி, பசுமை ராமசாமி, கே.எஸ்.சி. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தங்கவேல் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் கந்தசாமி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment