Tuesday, January 20, 2015
சாமுண்டிபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த கடை முன் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை (எண் 1930) உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டாஸ்மாக் மதுக் கடையால் பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த மதுக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன.
இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சித்திரா, ஜனவரி 17-ஆம் தேதிக்குள் கடையை அப்புறப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். ஆனாலும், அந்த கடை அப்புறப்படுத்தப்படவில்லை. திங்கள்கிழமை வழக்கம்போல் அந்த கடை திறக்கப்பட்டது.
உடனடியாக, அப்பகுதி பொதுமக்களுடன் அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் மதுக்கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த கடை மூடப்பட்டு, போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையடுத்து, அனைதிந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் சாவித்திரி, தலைவர் அங்குலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலர் நவபாலன், தலைவர் நவநீதன் உள்ளிட்டோர் மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரிடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனுகொடுத்தனர்.
மதுக்கடையை இடம் மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
முசிறி கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மதுபாட்டில்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள நுகர்பொருள் வா...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர் அரசு மருத்துவமனையை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையான தரத்தில் உயர்த்திட ரூ.5.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
திருப்பூர், திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம...
-
Blossom Kochhar Aroma Magic launches a new range of Professional Facial Kit in Trichy Trichy, August 6, 2015: Designed to remove...
0 comments:
Post a Comment