Thursday, January 01, 2015
காசோலை மோசடி வழக்கு தொடர்பாக தாராபுரம் நகராட்சி துணைத் தலைவர் கோவிந்தராஜ், திருப்பூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
தாராபுரம் நகராட்சித் துணைத் தலைவரான கோவிந்தராஜ், தனது கிரஷர் தொழிலுக்கு தேவையான இயந்திரம் வாங்க கடந்த 2008-ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள நிதிநிறுவனத்தில் ரூ.50 லட்சம் கடன் வாங்கியிருந்ததாராம். அவர், கடனைத் திரும்பச் செலுத்தும் பொருட்டு, காசோலையை அந்நிறுவனத்திற்கு அளித்திருந்தாராம்.
இந்நிலையில், கோவிந்தராஜின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பியதையடுத்து, அந்த நிதிநிறுவனம் சார்பில் திருப்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு கோவிந்தராஜ் ஆஜராகாமல் இருந்ததையடுத்து, அவருக்கு பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிந்தராஜ் புதன்கிழமை திருப்பூர் நீதித் துறை நடுவர் (எண்.1) ராமகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment