Thursday, January 01, 2015
காசோலை மோசடி வழக்கு தொடர்பாக தாராபுரம் நகராட்சி துணைத் தலைவர் கோவிந்தராஜ், திருப்பூர் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார்.
தாராபுரம் நகராட்சித் துணைத் தலைவரான கோவிந்தராஜ், தனது கிரஷர் தொழிலுக்கு தேவையான இயந்திரம் வாங்க கடந்த 2008-ஆம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள நிதிநிறுவனத்தில் ரூ.50 லட்சம் கடன் வாங்கியிருந்ததாராம். அவர், கடனைத் திரும்பச் செலுத்தும் பொருட்டு, காசோலையை அந்நிறுவனத்திற்கு அளித்திருந்தாராம்.
இந்நிலையில், கோவிந்தராஜின் வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பியதையடுத்து, அந்த நிதிநிறுவனம் சார்பில் திருப்பூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு கோவிந்தராஜ் ஆஜராகாமல் இருந்ததையடுத்து, அவருக்கு பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிந்தராஜ் புதன்கிழமை திருப்பூர் நீதித் துறை நடுவர் (எண்.1) ராமகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
0 comments:
Post a Comment