Monday, January 05, 2015

இலங்கையில், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிரச்சாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிதது, மும்பையில் உள்ள சல்மான்கான் இல்லத்தின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அந்நாட்டில் பிரச்சாரம் செய்தார்.
சல்மான் கானுடன் பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்ணாண்டசும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்கு இலங்கை தமிழர்களும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள சல்மான்கான் இல்லத்தின் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சல்மான் கானுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
தமிழர்களான எங்களை மறந்து ராஜபக்சேவிற்கு ஆதரவளித்த சல்மான் கானுக்கு எங்கள் இதயத்தில் இனி இடமில்லை என்று ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தெரிவித்தனர். அப்போது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாகக் கூறினர்.
இதற்கு சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சல்மான் கான் வீட்டை முற்றுகையிட முற்பட்ட போது, நாம்தமிழர் கட்சியயினரை காவல் துறையில் தைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment