Thursday, January 01, 2015
மண் சாலைகளைத் தார்ச்சாலைகளாக மாற்றியமைக்க வேண்டும் என அவிநாசி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
அவிநாசி ஒன்றியக் குழுக் கூட்டம், ஒன்றியக் குழுத் தலைவர் பத்மநந்தினிஜெகதீசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்((ஊராட்சி), ராஜகோபால், துணைத் தலைவர் சிவகாமி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கவுன்சிலர்கள் பேசியது:
கணேசன் (கொமதேக): முருகம்பாளையம் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழாய்கள் அமைத்து, உப்பிலிபாளையத்திற்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும். ராமநாதபுரம் ஊராட்சி தொட்டக்களாம்புதூரில் இருந்து செங்காளிபாளையம் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.
விஜயராகவன் (சிபிஐ): கருவலூர் நைனாம்பாளையம் ஆழ்குழாய் கிணற்றுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில், 10 ஹெச்.பி. மின் மோட்டார் பொருத்த நிதி ஒதுக்கீடு செய்து, ஓராண்டு ஆகியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எலச்சிபாளையம் முதல் தண்ணீர்பந்தல் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.
கண்ணம்மாள் ராமசாமி(அதிமுக): பிச்சாண்டம்பாளையம் புதூர் ஏ.டி.காலனி முதல் பெரிய ஓலப்பாளையம் வழியாக சின்ன ஓலப்பாளையத்திற்கு தார்ச் சாலை அமைக்க வேண்டும்.
சக்திவேல் (சுயே): நீண்ட காலமாக குடிநீருக்காகப் போராடி வரும் லூர்துபுரம் மக்களுக்கு அவிநாசி, அன்னூர், சூலூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில், சாத்தியப்பட்ட வகையில் குடிநீர் வழங்க வேண்டும்.
ராஜகோபால் (வட்டார வளர்ச்சி அலுவலர்): சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக லூர்துபுரத்தில் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுத்தால், கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அப்பகுதிக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்துதரப்படும்.
செந்தில்குமார்(அதிமுக): தேவம்பாளையம் முதல் குமாரபாளையம் வரை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பனை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர் (பத்மநந்தினி ஜெகதீசன்): மண் சாலைகளை தார்ச் சாலையாக மாற்றியமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் வரும் 10 நாள்களுக்கு விடப்பட்டு, வேலைகள் துவக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
5, 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்த தமிழக அரசிற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சியில் நன்றி தெரிவித்து உள்ளது. ...
-
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிழக்கு வட்டார நிர்வாகிகள் கூட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
*Small Gesture of Help* *CBOA RAJASTHAN* By the inspiration of our *GS Manimaran Sir* and Under the guidance of our beloved *OJS Ra...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தையொட்டி, பல மாவட்டங்களில் ஞாயி...
0 comments:
Post a Comment