Thursday, January 08, 2015
ஆண்டுதோறும் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நடவு செய்யப்பட்டு தை மாதம் அறுவடை செய்யப்படும் புகையிலை பயிர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கயம் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தண்ணீர் பிரச்சினை, பராமரிப்பு, விலையின்மை போன்ற காரணங்களால் புகையிலை பயிரிடுவதை விவசாயிகள் படிப்படியாக குறைத்துக் கொண்டு மாற்றுப் பயிர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையிலும் காங்கயம் அடுத்துள்ள புதுப்பாளையம், காங்கயம்பாளையம், ஊதியூர், செங்கோடம்பாளையம், மரவபாளையம், சித்தம்பாளையம், பகுதிகளில் சில நூறு ஏக்கர் பரப்பில் விவசாயிகள் புகையிலை சாகுபடி செய்துள்ளனர்.
இதுபற்றி புகையிலை விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:–
ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வரை நடப்படும் புகையிலை 110 நாள் பயிராகும். உழவு, களையெடுத்தல், சிம்பு எனப்படும் கிளைகள் ஒடித்தல், உரச்செலவுகள் என ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். செடியின் விலை சுமாராக ரூ.8–க்கு விற்றாலும் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவு போக நிகர லாபமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் கிடைக்கும் என்றனர்.
இங்கு விளையும் புகையிலை கொடுவாயைச் சேர்ந்த உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், செங்கனச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அதிகமாக புகையிலை விளைந்த காலங்களில் உள்ளூரிலேயே அவற்றை பதப்படுத்தி வந்தனர். இதற்காக கொடுவாய், வெள்ளியம்பாளையம், குண்டடம் பகுதிகளில் ஏராளமான புகையிலை குடோன்கள் இருந்தன. தற்போது புகையிலை சாகுபடி குறைந்த காரணத்தினால் அவைகள் கல்யாண மண்டபங்களாகவும், மாட்டுத் தொழுவங்களாகவும் மாறிவிட்டன.
இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையிலும் காங்கயம் அடுத்துள்ள புதுப்பாளையம், காங்கயம்பாளையம், ஊதியூர், செங்கோடம்பாளையம், மரவபாளையம், சித்தம்பாளையம், பகுதிகளில் சில நூறு ஏக்கர் பரப்பில் விவசாயிகள் புகையிலை சாகுபடி செய்துள்ளனர்.
இதுபற்றி புகையிலை விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:–
ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வரை நடப்படும் புகையிலை 110 நாள் பயிராகும். உழவு, களையெடுத்தல், சிம்பு எனப்படும் கிளைகள் ஒடித்தல், உரச்செலவுகள் என ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். செடியின் விலை சுமாராக ரூ.8–க்கு விற்றாலும் ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவு போக நிகர லாபமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் கிடைக்கும் என்றனர்.
இங்கு விளையும் புகையிலை கொடுவாயைச் சேர்ந்த உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கேரளா மாநிலம் கொல்லம், கோட்டயம், செங்கனச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. அதிகமாக புகையிலை விளைந்த காலங்களில் உள்ளூரிலேயே அவற்றை பதப்படுத்தி வந்தனர். இதற்காக கொடுவாய், வெள்ளியம்பாளையம், குண்டடம் பகுதிகளில் ஏராளமான புகையிலை குடோன்கள் இருந்தன. தற்போது புகையிலை சாகுபடி குறைந்த காரணத்தினால் அவைகள் கல்யாண மண்டபங்களாகவும், மாட்டுத் தொழுவங்களாகவும் மாறிவிட்டன.
இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment