Saturday, February 14, 2015

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு சில நாடுகளில் ஆதரவும், சில நாடுகளில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்தியாவில் காதலர் தினத்துக்கு பல அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
காதலர் தினமான இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் தேவர் தேசிய பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவா, நிர்வாகிகள் சரவணன், சித்தன், ரமேஷ் உள்பட 20–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் காதலர் தினத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரித்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் நடத்திய 20 பேரை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்தில் அதே இடத்தில் இந்து இளைஞர் பேரவை சார்பில் காதலர் தினத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் 25–க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முகமூடி அணிந்து காதலர் தினத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து இவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment