Saturday, February 14, 2015

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு சில நாடுகளில் ஆதரவும், சில நாடுகளில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. இந்தியாவில் காதலர் தினத்துக்கு பல அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
காதலர் தினமான இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் தேவர் தேசிய பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவா, நிர்வாகிகள் சரவணன், சித்தன், ரமேஷ் உள்பட 20–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் காதலர் தினத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரித்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டம் நடத்திய 20 பேரை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்தில் அதே இடத்தில் இந்து இளைஞர் பேரவை சார்பில் காதலர் தினத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமையில் 25–க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முகமூடி அணிந்து காதலர் தினத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து இவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment