Friday, February 06, 2015

On Friday, February 06, 2015 by farook press in ,    
வீரபாண்டி துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. எனவே வீரபாண்டி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம், பாரதிநகர், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம்பாளையம், என்.ஏ.நகர், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
மேலும் ஆண்டிபாளையம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், சின்னாண்டிபாளையம், பெரியாண்டிபாளையம், செல்லம் நகர், எஸ்.ஆர்.நகர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜி.சிவசாமி தெரிவித்துள்ளார்

0 comments: