Friday, February 06, 2015
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.
அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர். தீவிரவாதிகள் கெடு
இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.
அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.
அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர். தீவிரவாதிகள் கெடு
இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.
அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment