Friday, February 06, 2015
ஜோர்டான் விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.
அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர். தீவிரவாதிகள் கெடு
இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.
அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ என்பவர், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் கடந்த டிசம்பர் மாதம் 24–ந் தேதி பிடிபட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது.
அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்தனர். தீவிரவாதிகள் கெடு
இதனையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதியாக இருந்த அல்–கசாஸ்பெயை விடுவிக்குமாறு கோரிக்கை எழுந்தது.
அவரை சிறை வைத்த தீவிரவாதிகள், ஈராக்கிய பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என்று கெடு விதித்தனர். விமானி அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.
அல்–கசாஸ்பெ உயிருடன் இருப்பதை உறுதிசெய்தால் பெண் தீவிரவாதியை ஒப்படைத்து விடுகிறோம் என்று ஜோர்டான் அரசு கூறியது. இதற்கிடையே ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோவை தலையை வெட்டி படுகொலை செய்தனர். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் தெரியவரவில்லை.
விமானி உயிருடன் இருக்கிறாரா? என்பதற்கான ஆதாரத்திகாக காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.
பெட்ரோல் ஊற்றி எரிப்பு
இந்நிலையில் தீவிரவாதிகள் விமானி முயாத்தை கூண்டில் அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றுள்ளனர். அந்த வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டனர்.
விமானி முயாத் அல்–கசாஸ்பெக்கு ஆரஞ்சு நிறஉடை அணிவிக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றிலும் முகத்தை மூடிக்கொண்ட ஆயுதம் தாங்கிய ஐ.எஸ். தீவிரவாதிகள் நிற்கின்றனர். தீவிரவாதிகள் முயாத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து உயிருடன் எரிக்கும் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் இந்த கொடூரச் செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவரை, ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொன்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சர்வதேச நாடுகளின் கூட்டு தாக்குதலில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பக்ரைன் ஆகிய நாடுகள் பங்குபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, டென்மார்க் பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment