Monday, March 23, 2015
திருப்பூரில் குழந்தையை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் லே-அவுட்டைச் சேர்ந்தவர் அழகர்சாமி (34). இவரது மனைவி பாண்டீஸ்வரி(25). இவர்களின் மகள் நிவேதாஸ்ரீ (4). இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமானது முதலே பாண்டீஸ்வரின் நடத்தையில் அழகர்சாமி சந்தேகித்து வந்துள்ளார். இதனால் அவரை நீண்ட நாள்களாக கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில், கணவனின் கொடுமையை தாங்க முடியாத பாண்டீஸ்வரி, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். தனது மகள் நிவேதாஸ்ரீயை வீட்டில் உள்ள கூரையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததுடன், பின்னர் பாண்டீஸ்வரியும் அதே கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் 20.6.2010-ம் தேதி நடந்தது. இதுகுறித்து பாண்டீஸ்வரின் தந்தை செல்வராஜ் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அழகர்சாமியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி வசந்தலீலா விசாரித்து தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட அழகர்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
0 comments:
Post a Comment