Monday, March 23, 2015
திருப்பூரில் குழந்தையை கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் வெள்ளியங்காடு முத்தையன் லே-அவுட்டைச் சேர்ந்தவர் அழகர்சாமி (34). இவரது மனைவி பாண்டீஸ்வரி(25). இவர்களின் மகள் நிவேதாஸ்ரீ (4). இவர்களுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமானது முதலே பாண்டீஸ்வரின் நடத்தையில் அழகர்சாமி சந்தேகித்து வந்துள்ளார். இதனால் அவரை நீண்ட நாள்களாக கொடுமைப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில், கணவனின் கொடுமையை தாங்க முடியாத பாண்டீஸ்வரி, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். தனது மகள் நிவேதாஸ்ரீயை வீட்டில் உள்ள கூரையில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததுடன், பின்னர் பாண்டீஸ்வரியும் அதே கூரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவம் 20.6.2010-ம் தேதி நடந்தது. இதுகுறித்து பாண்டீஸ்வரின் தந்தை செல்வராஜ் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அழகர்சாமியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி வசந்தலீலா விசாரித்து தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட அழகர்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புக் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment