Monday, March 23, 2015
திருப்பூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாம் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒப்புதல் ரசீது பெற்றவர்களுக்கு ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 வேலம்பாளையம், நல்லூர் மண்டல அலுவலகங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
15 வேலம்பாளையத்துக்கு உள்பட்ட 8, 9,10,12,13 ஆகிய வார்டுகள், நல்லூர் மண்டலத்திற்குள்பட்ட 31, 32, 42, 43, 44, 45 ஆகிய வார்டுகளில் இதுவரை ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்காதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
புகைப்படம் எடுக்க வரும்போது 2011ம் ஆண்டில் வழங்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புதல் ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
இதேபோல், மாநகராட்சி மைய அலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்காக புதிதாக பூர்த்தி செய்து தரப்படும் படிவங்களுக்கு புகைப்படம் எடுப்பது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment