Monday, March 23, 2015
திருப்பூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாம் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒப்புதல் ரசீது பெற்றவர்களுக்கு ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 வேலம்பாளையம், நல்லூர் மண்டல அலுவலகங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
15 வேலம்பாளையத்துக்கு உள்பட்ட 8, 9,10,12,13 ஆகிய வார்டுகள், நல்லூர் மண்டலத்திற்குள்பட்ட 31, 32, 42, 43, 44, 45 ஆகிய வார்டுகளில் இதுவரை ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்காதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
புகைப்படம் எடுக்க வரும்போது 2011ம் ஆண்டில் வழங்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புதல் ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
இதேபோல், மாநகராட்சி மைய அலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்காக புதிதாக பூர்த்தி செய்து தரப்படும் படிவங்களுக்கு புகைப்படம் எடுப்பது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
.jpg)
0 comments:
Post a Comment