Monday, March 23, 2015
திருப்பூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாம் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒப்புதல் ரசீது பெற்றவர்களுக்கு ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 வேலம்பாளையம், நல்லூர் மண்டல அலுவலகங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
15 வேலம்பாளையத்துக்கு உள்பட்ட 8, 9,10,12,13 ஆகிய வார்டுகள், நல்லூர் மண்டலத்திற்குள்பட்ட 31, 32, 42, 43, 44, 45 ஆகிய வார்டுகளில் இதுவரை ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்காதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
புகைப்படம் எடுக்க வரும்போது 2011ம் ஆண்டில் வழங்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புதல் ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
இதேபோல், மாநகராட்சி மைய அலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்காக புதிதாக பூர்த்தி செய்து தரப்படும் படிவங்களுக்கு புகைப்படம் எடுப்பது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
திருப்பூர் மாநகராட்சி, திருமுருகன் பூண்டி பேரூராட்சி மன்ற இடைதேர்தல் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பி...
-
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான (2017-2018) சேவை நாள் விழா 14.03.2018 புதன்கிழமை மாலை 3.00 மணியளவ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
உடுமலைபேட்டை அருகே பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் ராம்குமார் (31) மீது...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
0 comments:
Post a Comment