Monday, March 23, 2015
திருப்பூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாம் மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எம்.அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒப்புதல் ரசீது பெற்றவர்களுக்கு ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
15 வேலம்பாளையம், நல்லூர் மண்டல அலுவலகங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
15 வேலம்பாளையத்துக்கு உள்பட்ட 8, 9,10,12,13 ஆகிய வார்டுகள், நல்லூர் மண்டலத்திற்குள்பட்ட 31, 32, 42, 43, 44, 45 ஆகிய வார்டுகளில் இதுவரை ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்காதவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
புகைப்படம் எடுக்க வரும்போது 2011ம் ஆண்டில் வழங்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புதல் ரசீது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.
இதேபோல், மாநகராட்சி மைய அலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும் ஆதார் அட்டைக்காக புதிதாக பூர்த்தி செய்து தரப்படும் படிவங்களுக்கு புகைப்படம் எடுப்பது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
.jpg)
0 comments:
Post a Comment