Monday, March 23, 2015
திருப்பூர் அருகே பள்ளி மாணவரைக் கடத்தி ரூ. 5 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக திருப்பூர் ஊரக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர், சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (32). இவரது மனைவி சல்மா ஷாரீஃப். இவர்களது மகன் முகமதுஇம்ரான் (10). அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், சனிக்கிழமை மாலை தனது நண்பர் இசாக் (15), அவரது நண்பர்கள் ஷாருகான், முஸ்தாக் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியிலுள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்கச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், தாங்களும் குளிக்கத்தான் செல்கிறோம் என்று கூறி, முகமது இம்ரான், இசாக் ஆகியோரை தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனராம்.
தொடர்ந்து, இசாக்கை பி.ஏ.பி. வாய்க்கால் அருகே இறக்கி விட்டு,விட்டு முகமது இம்ரானை மிரட்டி கூலிப்பாளையம் நான்கு சாலை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து முகமது இம்ரானை மிரட்டி அடித்ததாகத் தெரிகிறது.
மேலும், முகமதுஇம்ரான் பெற்றோரை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு ரூ. 10 ஆயிரம் கொடுத்தால் தங்கள் மகனை விடுவதாகக் கூறினார்களாம்.
இதனால் அச்சமடைந்த முகமதுஇம்ரானின் பெற்றோர், ரூ. 5 ஆயிரம் தருவதாக உறுதியளித்ததையடுத்து, பணத்துடன் கூலிப்பாளையம் நான்கு சாலைக்கு வருமாறு அந்த நபர்கள் தெரிவித்தனராம். தொடர்ந்து, பணத்தை எடுத்துக்கொண்டு சல்மாஷாரீஃப், கூலிப்பாளையம் நான்கு சாலைக்கு சென்றுள்ளார். பின்னர், அங்கு மறைந்து நின்ற இருநபர்கள் ரூ. 5 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு முகமதுஇம்ரானை விடுவித்து விட்டதாக தெரிகிறது.
இந்த கடத்தல் சம்பவம் குறித்து முகமதுஇம்ரானின் பெற்றோர் திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கடத்தி பணம் பறித்த நபர்களை தேடி வருகின்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
0 comments:
Post a Comment