Monday, March 23, 2015
ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 90-ஆவது பிறந்தநாளையொட்டி, மாரத்தான் போட்டி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு போட்டியை தொடங்கி வைத்தார். திருப்பூர், காங்கயம் சாலை, நல்லூர் சி.எஸ்.ஐ.தேவாலயம் முன் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், முத்தணம்பாளையம், கணபதிபாளையம், சந்திராபுரம், செவந்தாம்பாளையம், சேரன் நகர், ராக்கியாபாளையம் பிரிவு வழியாக மீண்டும் நல்லூரில் நிறைவடைந்தது.
இதில், திருப்பூர் சென்சூரி பவுண்டேஷன் பள்ளி மாணவர் காளிமுத்து முதலிடமும், பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ராஜ் இரண்டாமிடமும், திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றிபெற்றவர்களுக்கும், முதல் பத்து இடங்களை பிடித்த நபர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, கோபி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment