Monday, March 23, 2015
ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 90-ஆவது பிறந்தநாளையொட்டி, மாரத்தான் போட்டி திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு போட்டியை தொடங்கி வைத்தார். திருப்பூர், காங்கயம் சாலை, நல்லூர் சி.எஸ்.ஐ.தேவாலயம் முன் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம், முத்தணம்பாளையம், கணபதிபாளையம், சந்திராபுரம், செவந்தாம்பாளையம், சேரன் நகர், ராக்கியாபாளையம் பிரிவு வழியாக மீண்டும் நல்லூரில் நிறைவடைந்தது.
இதில், திருப்பூர் சென்சூரி பவுண்டேஷன் பள்ளி மாணவர் காளிமுத்து முதலிடமும், பொள்ளாச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ராஜ் இரண்டாமிடமும், திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றிபெற்றவர்களுக்கும், முதல் பத்து இடங்களை பிடித்த நபர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, கோபி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...

0 comments:
Post a Comment