Wednesday, March 04, 2015
உசிலம்பட்டி அருகே கணவாய் பகுதியில் வனத்துறை இடத்தில் உள்ள தேவாலயத்தை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து கிறிஸ்தவர்கள்
செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி - தேனி சாலையில் கணவாய் பகுதியில் வனத்துறை இடத்தில் சிறிய மாதா சிலை வைக்கப்பட்டு, பின்னர், சிறிய ஆலயமாக கட்டி வழிபட்டு
வந்தனர். மேலும், தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி வந்தனர். மலைப்பகுதியில் சிலுவைகளையும் நட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
அருகிலுள்ள கிராம பொதுமக்கள் வழக்குத் தொடர்ந்தனர். வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தை அகற்றுமாறு
நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருப்பதால், அதற்கான உத்தரவு வரும் வரை காத்திருக்குமாறு அதிகாரிகளை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் 15 நாள்களுக்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உசிலம்பட்டி வட்டாட்சியருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
விவரம் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் கலைந்து சென்றனர்.
உத்தமபாளையம்: இந்நிலையில், தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி ஆர்.சி. சபையைச் சேர்ந்தவர்கள்
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் ஏடி.எஸ்.பி. உமா, டி.எஸ்.பி. கண்ணன்,
கோட்டாட்சியர் பார்த்திபன், வட்டாட்சியர் சேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
வழக்குப்பதிவு: இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதாக உத்தமபாளையம் ஆர்.சி தேவாலய போதகர் பால்ராஜ்,
கம்பத்தைச் சேர்ந்த அருள் பிரகாசம், சற்குணம், இன்பராஜ் உள்பட 140 பேர் மீது உத்தமபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போடி: இதேபோல், போடி அருகே டி.சிந்தலைச்சேரியிலும் அங்குள்ள தேவாலயத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போடி-சின்னமனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தேவாரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்
பொறுப்பு வகிக்கும் டவுன் இன்ஸ்பெக்டர் பாலகுரு, அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயராணி மற்றும் போலீஸார் சாலை மறியலில்
ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment