Thursday, March 26, 2015
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலை அரசு விழா மற்றும் துறை சார்ந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமலும், அழைத்தாலும் தாமதமாக தகவல்கள் கொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டமன்ற உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை மற்றும் உரிமைகளை மறுப்பதாகவே இதை கருதுகிறோம். இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்தும் செயலாகும்.
எனவே எதிர்வரும் காலங்களில் கீழ்கண்ட தீர்மான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும் உரிய முக்கியத்துவத்தோடு சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும், அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லி கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல் நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும், அரசு விழாக்களை ஆளும் கட்சி விழாக்களாக மாற்றி நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...

0 comments:
Post a Comment