Thursday, March 26, 2015
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலை அரசு விழா மற்றும் துறை சார்ந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமலும், அழைத்தாலும் தாமதமாக தகவல்கள் கொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டமன்ற உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை மற்றும் உரிமைகளை மறுப்பதாகவே இதை கருதுகிறோம். இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்தும் செயலாகும்.
எனவே எதிர்வரும் காலங்களில் கீழ்கண்ட தீர்மான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும் உரிய முக்கியத்துவத்தோடு சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும், அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லி கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல் நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும், அரசு விழாக்களை ஆளும் கட்சி விழாக்களாக மாற்றி நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...

0 comments:
Post a Comment