Thursday, March 26, 2015
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலை அரசு விழா மற்றும் துறை சார்ந்த நிகழ்ச்சிக்கு அழைக்காமலும், அழைத்தாலும் தாமதமாக தகவல்கள் கொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டமன்ற உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை மற்றும் உரிமைகளை மறுப்பதாகவே இதை கருதுகிறோம். இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்தும் செயலாகும்.
எனவே எதிர்வரும் காலங்களில் கீழ்கண்ட தீர்மான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும் உரிய முக்கியத்துவத்தோடு சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும், அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லி கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல் நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும், அரசு விழாக்களை ஆளும் கட்சி விழாக்களாக மாற்றி நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment