Thursday, March 26, 2015
தாராபுரம் அருகே மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசியதாக ஓவிய ஆசிரியரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்தது.
அதைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பள்ளி தலைமையாசிரியர் அருள்ராஜ், கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், பெற்றோர்கள் சார்பில் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த பள்ளியின் ஓவிய ஆசிரியர் காளிமுத்துவை கைது செய்தனர். மேலும், இதைக் கண்காணிக்க தவறியதாக தலைமையாசிரியர் அருள்ராஜ் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment