Thursday, March 26, 2015
தாராபுரம் அருகே மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசியதாக ஓவிய ஆசிரியரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்தது.
அதைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பள்ளி தலைமையாசிரியர் அருள்ராஜ், கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், பெற்றோர்கள் சார்பில் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த பள்ளியின் ஓவிய ஆசிரியர் காளிமுத்துவை கைது செய்தனர். மேலும், இதைக் கண்காணிக்க தவறியதாக தலைமையாசிரியர் அருள்ராஜ் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment