Thursday, March 26, 2015
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரான கே.தங்கவேலை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் அக்கட்சியின் மாவட்டச் செயலர் கே.காமராஜ் செவ்வாய்க்கிழமை அளித்த கடிதத்தில் கூறியிருப்பது:
அரசு விழாக்கள், அரசுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் அழைக்கப்படாமல், அவர் புறக்கணிக்கப்படுகிறார். அப்படி, அழைத்தாலும் தாமதமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை, உரிமைகளை மறுப்பதாகவே இது கருதப்படுகிறது. இத்தகைய செயல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமரியாதை செய்வதாகும்.
எனவே, வரும் காலங்களில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும், உரிய முக்கியத்துவத்தோடு சட்டப்பேரவை உறுப்பினருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும். நிகழ்ச்சிகள் தொடர்பாக அவரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல்நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும்.
இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
0 comments:
Post a Comment