Thursday, March 26, 2015
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரான கே.தங்கவேலை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் அக்கட்சியின் மாவட்டச் செயலர் கே.காமராஜ் செவ்வாய்க்கிழமை அளித்த கடிதத்தில் கூறியிருப்பது:
அரசு விழாக்கள், அரசுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் அழைக்கப்படாமல், அவர் புறக்கணிக்கப்படுகிறார். அப்படி, அழைத்தாலும் தாமதமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை, உரிமைகளை மறுப்பதாகவே இது கருதப்படுகிறது. இத்தகைய செயல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமரியாதை செய்வதாகும்.
எனவே, வரும் காலங்களில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும், உரிய முக்கியத்துவத்தோடு சட்டப்பேரவை உறுப்பினருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும். நிகழ்ச்சிகள் தொடர்பாக அவரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல்நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும்.
இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment