Thursday, March 26, 2015
திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரான கே.தங்கவேலை புறக்கணிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் அக்கட்சியின் மாவட்டச் செயலர் கே.காமராஜ் செவ்வாய்க்கிழமை அளித்த கடிதத்தில் கூறியிருப்பது:
அரசு விழாக்கள், அரசுத் துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு, திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் அழைக்கப்படாமல், அவர் புறக்கணிக்கப்படுகிறார். அப்படி, அழைத்தாலும் தாமதமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இது திட்டமிட்டு புறக்கணிக்கும் நிகழ்வாகவே கருத வேண்டியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஜனநாயகப்பூர்வ கடமை, உரிமைகளை மறுப்பதாகவே இது கருதப்படுகிறது. இத்தகைய செயல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமரியாதை செய்வதாகும்.
எனவே, வரும் காலங்களில் திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களுக்கும், உரிய முக்கியத்துவத்தோடு சட்டப்பேரவை உறுப்பினருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும். நிகழ்ச்சிகள் தொடர்பாக அவரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, கலந்து பேசி தேதி தீர்மானிக்க வேண்டும், நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முதல்நாள் தகவல் சொல்வது என்ற போக்கை கைவிட வேண்டும்.
இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment