Tuesday, March 17, 2015
காங்கயம் பகுதியில் தகுந்த விலை கிடைக்காததால், வயலில் விளைந்த தக்காளிப் பழங்கள் தற்போது கால்நடைகளுக்கு தீவனமாகி வருகின்றன.
இதுகுறித்து தக்காளி பயிர் செய்த வீரணம்பாளையம் விவசாயி தங்கராசு கூறியது: தக்காளி சாகுபடி செலவு அதிகரித்துள்ளது. உரம், பூச்சி மருந்து ஆகியவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. மாதக்கணக்கில் பயிர் செய்த தக்காளியை பறிப்பதற்கு ஆள்கள் கிடைப்பதில்லை. ஆள்கள் கிடைத்தாலும், கூலி அதிகமாக கேட்கிறார்கள். உற்பத்தி செய்த பொருள்களை சந்தைக்கு கொண்டு செல்ல ஆட்டோ வாடகை செலவு அதிகரித்து வருகிறது.
வெளிமார்க்கெட் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தக்காளிக்கு உற்பத்தி செலவைக் காட்டிலும், குறைவாக விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தக்காளியை மாடுகளுக்கும் உணவாக அளித்து வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த அவல நிலையைப் போக்குவதற்கு அரசு போதிய அளவு குளிர்சாதன காய்கறி கிடங்கு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment