Tuesday, March 17, 2015
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 20 ஆண்டுகளாக குடிசைப் போட்டு வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலித்தொழிலாளர்களாவர். இந்தக் குடும்பத்தினர் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. பட்டா இல்லாத காரணத்தால், அப் பகுதி வீடுகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.
இதனால் அப் பகுதி மக்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு கொடுக்க வந்தனர். திடீரென அவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே பல்லடம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்தச் சாலையில் பொதுமக்கள் மேற்கொண்ட மறியலால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தெற்கு காவல் ஆய்வாளர் நெல்சன் தமைமையிலான போலீஸார் விரைந்து வந்தனர்.
போலீஸார் வருவதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மறியலை கைவிட்டு ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு ஆட்சியர் கு.கோவிந்தராஜை சந்தித்து தங்களது வீடுகளுக்கு இலவசமாக பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி மனுவை அளித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment