Monday, March 09, 2015

On Monday, March 09, 2015 by farook press in ,    
ஈரோடு மாவட்டம் கோபி மணிமேகலை வீதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியில் தங்கி, வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாதப்பூர் பகுதியில் முத்துசாமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்துசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: