Saturday, March 07, 2015
திருப்பூர் அருகே கோவில் ஊழியரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கட்டையால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறதாவது:
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த பள்ளபாளையம் சர்ச் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 56). இவர் வாழைதோட்டத்து அய்யன்கோவிலில் உண்டியல் காப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் கதிரேசன் (29). கார் டிரைவர். கடந்த 2–ந்தேதி இரவு பள்ளபாளையம் பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆட்டோஸ்டேண்ட் அருகே கதிரேசன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஆமோஸ்சுந்தர்சிங் (27) என்பவர் கதிரேசனிடம் வாடகைக்கு ஆட்டோ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் நான் ஆட்டோ டிரைவர் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கதிரேசன் அங்கிருந்து அருகில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஆமோஸ் சுந்தர்சிங் மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கதிரேசனை தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு சென்ற கதிரேசனின் தந்தை கணேசன் ஆமோசை சுந்தர்சிங்கை தடுத்து தட்டி கேட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர் கணேசனை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த கணேசனை அங்குள்ள வீதியில் விரட்டி சென்ற ஆமோஸ் அங்கு கிடந்த கட்டையால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து இறந்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆமோசை தாக்கியதாக தெரிகிறது. அவர்களிடம் இருந்து தப்பி சென்ற அவர் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆமோஸ் சுந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் அவரை திருப்பூர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். திருப்பூர் அருகே கோவில் ஊழியரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment