Monday, March 30, 2015

On Monday, March 30, 2015 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் அரசு மருத்துவமனையில் வர்ணம் பூசும் பணியினை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க., எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில், பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளரும்,துணை மேயருமான சு.குணசேகரன் ஏற்பாட்டில்  அரசு தலைமை பொது மருத்துவமனையில் இயங்கி வரும் மையக் கருவி தொற்று நீக்கும் பிரிவு அறையில் சுமார் 5 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசும் பணியினை மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார்.அருகில் 
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி, மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கே.பி.ஜி.மகேஷ்ராம், 4 வது மண்டலத்தலைவர் கிருதிகா சோமசுந்தரம், வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன் மற்றும் சடையப்பன், நீதிராஜன், பொங்கலூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.சிவாச்சலம், சடையப்பன், நாச்சிபாளையம் அப்புசாமி, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், வேலுசாமி, பேபி தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: