Wednesday, April 15, 2015
திருப்பூர் அருகே காவலரைப் போல் நடித்து பனியன் தொழிலாளியின் சைக்கிளைப் பறித்து சென்ற இளைஞரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், மிஷின் வீதி, வளம் பாலம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த அய்யாசாமியின் மகன் சுரேஷ் (28). பனியன் தொழிலாளியான இவர் செவ்வாய்க்கிழமை, வெங்கமேட்டில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சைக்கிளில் சென்றார்.
வெங்கமேடு நல்லாத்துபாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தன்னை போலீஸ் என கூறி சுரேஷை மிரட்டி சைக்கிளைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸாரிடம் சுரேஷ் புகார் அளித்தார்.
இதையடுத்து, பூலுவப்பட்டி சோதனைச் சாவடி அருகே அனுப்பர்பாளையம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் குப்பாயம்மன் காடு பகுதியைச் சேர்ந்த பாப்புசாமி மகன் ராஜேஷ்(22) என்பதும், சுரேஷை மிரட்டி சைக்கிளை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து இருசக்கர வாகனம், சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
ஸ்ரீரங்கத்தில் இன்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை ந...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment