Wednesday, April 15, 2015
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை, அண்ணா நகரைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் ராமசாமி(33). இவருக்குச் சொந்தமாக பாண்டியன் நகரில் உள்ள கிடங்கில் ஏற்றுமதி தரம் உள்ள பனியன்களை வைத்து இருந்தார்.
அந்தக் கிடங்கில் லோகேஸ்வரன்(23), ஸ்ரீதர்(21), குமார்(22) ஆகிய 3 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, அந்தக் கிடங்குக்குள் புகுந்த 3 பேர், லோகேஸ்வரன், ஸ்ரீதர், குமார் அறையில் அடைத்து வைத்து, அங்கிருந்த ரூ.80 லட்சத்திலான பனியன்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீஸார் நூர்பாட்சா, ரவிசந்திரன், மணிஹாசன், பிச்சைமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்து தப்பி ஓடிய நசீர், சிராஜ்தீன், சேக், பாபு, ஷாநவாஸ் ஆகிய 5 பேரும் திருப்பூர் நீதி மன்றத்தில் அண்மையில் சரணடைந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மதுரை ரத்தினபுரம் ஜெய்ஹிந்த்புரம் முதல் வீதியைச் சேர்ந்த ராமராஜின் மகன் நாகராஜ் (34), திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸார் நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய நாகராஜின் தம்பி பாலாஜியை போலீஸார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
ஸ்ரீரங்கத்தில் இன்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை ந...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment