Wednesday, April 15, 2015
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை, அண்ணா நகரைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் ராமசாமி(33). இவருக்குச் சொந்தமாக பாண்டியன் நகரில் உள்ள கிடங்கில் ஏற்றுமதி தரம் உள்ள பனியன்களை வைத்து இருந்தார்.
அந்தக் கிடங்கில் லோகேஸ்வரன்(23), ஸ்ரீதர்(21), குமார்(22) ஆகிய 3 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, அந்தக் கிடங்குக்குள் புகுந்த 3 பேர், லோகேஸ்வரன், ஸ்ரீதர், குமார் அறையில் அடைத்து வைத்து, அங்கிருந்த ரூ.80 லட்சத்திலான பனியன்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீஸார் நூர்பாட்சா, ரவிசந்திரன், மணிஹாசன், பிச்சைமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்து தப்பி ஓடிய நசீர், சிராஜ்தீன், சேக், பாபு, ஷாநவாஸ் ஆகிய 5 பேரும் திருப்பூர் நீதி மன்றத்தில் அண்மையில் சரணடைந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மதுரை ரத்தினபுரம் ஜெய்ஹிந்த்புரம் முதல் வீதியைச் சேர்ந்த ராமராஜின் மகன் நாகராஜ் (34), திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸார் நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய நாகராஜின் தம்பி பாலாஜியை போலீஸார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி கே.கள்ளிக்குடி பகுதியில் உள்ள என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடமியில் நடந்த விழாவில் சிரித்துக் கொண்டே ஜெயிக்கலாம் என்ற தலைப்பில் பேராசிரியர் கு....
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
0 comments:
Post a Comment