Wednesday, April 15, 2015
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பனியன் ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை அனுப்பர்பாளையம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை, அண்ணா நகரைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் ராமசாமி(33). இவருக்குச் சொந்தமாக பாண்டியன் நகரில் உள்ள கிடங்கில் ஏற்றுமதி தரம் உள்ள பனியன்களை வைத்து இருந்தார்.
அந்தக் கிடங்கில் லோகேஸ்வரன்(23), ஸ்ரீதர்(21), குமார்(22) ஆகிய 3 பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, அந்தக் கிடங்குக்குள் புகுந்த 3 பேர், லோகேஸ்வரன், ஸ்ரீதர், குமார் அறையில் அடைத்து வைத்து, அங்கிருந்த ரூ.80 லட்சத்திலான பனியன்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீஸார் நூர்பாட்சா, ரவிசந்திரன், மணிஹாசன், பிச்சைமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் கொள்ளைக்கு உடந்தையாக இருந்து தப்பி ஓடிய நசீர், சிராஜ்தீன், சேக், பாபு, ஷாநவாஸ் ஆகிய 5 பேரும் திருப்பூர் நீதி மன்றத்தில் அண்மையில் சரணடைந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மதுரை ரத்தினபுரம் ஜெய்ஹிந்த்புரம் முதல் வீதியைச் சேர்ந்த ராமராஜின் மகன் நாகராஜ் (34), திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸார் நாகராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய நாகராஜின் தம்பி பாலாஜியை போலீஸார் தேடி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment