Wednesday, April 15, 2015
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 13 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள நவீன பொழுதுபோக்கு பூங்கா செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமாக 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தொழிலதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி சார்பில் மேற்கு புறம் 3 ஏக்கரில் நம்பி ஆரூரர் ஆடவர் விளையாட்டுத் திடல், 4 ஏக்கரில் திருஞானசம்பந்தர் சிறுவர், மகளிர் அரங்கம், பூஞ்செடிகள், 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த வளையத்துக்கு வெளியே பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்த 2 ஏக்கரில் மாணிக்கவாசகர் மண்டபம், 4 ஏக்கரில் திருநாவுக்கரசர் பசு மடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொழுதுபோக்கு பூங்காவை தொழில் அதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி திறந்து வைத்தனர். உமாசங்கர் தாயார் சந்திராஞானவேல் குத்துவிளக்கு ஏற்றினார்.
சுப்பிரமணி அடிகளார், திருமுருகநாத சாமி அறக்கட்டளை துணைச் செயலாளர் குப்புசாமி, திருமடம் சுந்தரராச அடிகளார், அப்பர்அடி திருக்கூட்டம் சொக்கலிங்க அடிகளார், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களைத் திறந்து வைத்தனர்.
கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் விஸ்வநாதன், ருத்ராபிஷேக குழுத் தலைவர் முருகேசன், தொழில் அதிபர் கீதாலயா முருகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment