Wednesday, April 15, 2015
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 13 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள நவீன பொழுதுபோக்கு பூங்கா செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமாக 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தொழிலதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி சார்பில் மேற்கு புறம் 3 ஏக்கரில் நம்பி ஆரூரர் ஆடவர் விளையாட்டுத் திடல், 4 ஏக்கரில் திருஞானசம்பந்தர் சிறுவர், மகளிர் அரங்கம், பூஞ்செடிகள், 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த வளையத்துக்கு வெளியே பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்த 2 ஏக்கரில் மாணிக்கவாசகர் மண்டபம், 4 ஏக்கரில் திருநாவுக்கரசர் பசு மடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொழுதுபோக்கு பூங்காவை தொழில் அதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி திறந்து வைத்தனர். உமாசங்கர் தாயார் சந்திராஞானவேல் குத்துவிளக்கு ஏற்றினார்.
சுப்பிரமணி அடிகளார், திருமுருகநாத சாமி அறக்கட்டளை துணைச் செயலாளர் குப்புசாமி, திருமடம் சுந்தரராச அடிகளார், அப்பர்அடி திருக்கூட்டம் சொக்கலிங்க அடிகளார், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களைத் திறந்து வைத்தனர்.
கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் விஸ்வநாதன், ருத்ராபிஷேக குழுத் தலைவர் முருகேசன், தொழில் அதிபர் கீதாலயா முருகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
ஸ்ரீரங்கத்தில் இன்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை ந...
0 comments:
Post a Comment