Wednesday, April 15, 2015
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 13 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள நவீன பொழுதுபோக்கு பூங்கா செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமாக 13 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் தொழிலதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி சார்பில் மேற்கு புறம் 3 ஏக்கரில் நம்பி ஆரூரர் ஆடவர் விளையாட்டுத் திடல், 4 ஏக்கரில் திருஞானசம்பந்தர் சிறுவர், மகளிர் அரங்கம், பூஞ்செடிகள், 56 வகையான நட்சத்திர, ராசி, திசை மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த வளையத்துக்கு வெளியே பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்த 2 ஏக்கரில் மாணிக்கவாசகர் மண்டபம், 4 ஏக்கரில் திருநாவுக்கரசர் பசு மடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொழுதுபோக்கு பூங்காவை தொழில் அதிபர் உமாசங்கர்-சாந்தி தம்பதி திறந்து வைத்தனர். உமாசங்கர் தாயார் சந்திராஞானவேல் குத்துவிளக்கு ஏற்றினார்.
சுப்பிரமணி அடிகளார், திருமுருகநாத சாமி அறக்கட்டளை துணைச் செயலாளர் குப்புசாமி, திருமடம் சுந்தரராச அடிகளார், அப்பர்அடி திருக்கூட்டம் சொக்கலிங்க அடிகளார், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானங்களைத் திறந்து வைத்தனர்.
கோயில் செயல் அலுவலர் சரவணபவன், பேரூராட்சித் தலைவர் பழனிசாமி, துணைத் தலைவர் விஸ்வநாதன், ருத்ராபிஷேக குழுத் தலைவர் முருகேசன், தொழில் அதிபர் கீதாலயா முருகசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment