Wednesday, April 15, 2015
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்செவ்வாய்க்கிழமை குவிந்தனர்.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, பின்னர் பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
இதே போல், அமராவதி அணைக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் அங்குள்ள முதலைப் பண்ணையை கண்டு ரசித்தனர். அணைப் பகுதியில் உள்ள பூங்கா, மீன் பண்ணை ஆகியவற்றில் கூட்டம் அலை மோதியது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னார் மலைப் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அங்கு பூங்கன் ஓடைப் பகுதியில் சுற்றித் திரிந்த புள்ளி மான்கள், யானைகளை கண்டு ரசித்தனர். உடுமலையில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில், காமாட்சி அம்மன் கோயில், பிரசன்ன விநாயகர் கோயில் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் 10வது நாளாக 3.12.2015...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
ஸ்ரீரங்கத்தில் இன்று பங்குனி தேரோட்டம் நடைபெற்றது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவை ந...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
திருச்சி - 05 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் திரு...
0 comments:
Post a Comment