Tuesday, April 14, 2015
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5 நூல்கள் வெளியீட்டு விழாவில், அவர் ஆற்றிய சிறப்புரை:
திருவள்ளுவர், பாரதியார் போன்ற பல காலத்தை வென்ற
பெருமைமிகு கவிஞர்களை இந்த உலகுக்கு தமிழ் மொழிதான் அளித்துள்ளது.
பத்திரிகைகளில் வரும் தலையங்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவை தமிழின்
பல தளங்களை எடுத்துரைக்கும் சாதனங்களாகவே கருதவேண்டும்.
இதில், தலையங்கம் எழுதுவது என்பது ஒரு தனிக் கலை.
அதற்கென்று ஒரு தனித்த சிந்தனைப் பார்வை வேண்டும். தலையங்கத்தில்
விவாதப்பூர்வமான பல விஷயங்களை குறிப்பிட்டு, இறுதியில் தமக்கான ஒரு
நிலைப்பாட்டை குறிப்பிடவேண்டும். நமது நிலைப்பாட்டை வாசகர்கள்
ஒப்புக்கொள்ளுமாறு எழுதுவதே, தலையங்கத்தின் தனிச்சிறப்பு.
பத்திரிகை தலையங்கம் மிக எச்சரிக்கையாகவும்,
பக்குவத்துடனும் எழுதப்பட வேண்டும். பத்திரகையின் முகத்தைக் காட்டக்கூடிய
கண்ணாடியாக இருப்பது தலையங்கம்தான். எனவே, எதிர்காலத்திலாவது நாளிதழ்களில்
இலக்கியத்தை மையப்படுத்தி தலையங்கங்கள் எழுதப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்,
சுவாமி சதாசிவானந்தா, உலகத் திருக்குறள் பேரவை பொதுச் செயலர் ந.
மணிமொழியனார், புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் பி. வரதராஜன், பேராசிரியர்
மு. அருணகிரி, எழுத்தாளர் புதுகை மு. தருமராஜன், சாகித்ய அகாதெமி பொறுப்பு
அலுவலர் அ.சு. இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment