Friday, April 10, 2015
ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் நீக்கினால்தான், இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என வல்லரசு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவதாக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. மேலும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.

இது தவிர, மேற்கத்திய நாடுகள் ஈரானின் அணுசக்தி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹஸன் ரௌஹானி நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆற்றிய உரையில், ‘‘ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் அகற்றினால்தான் அணு ஆயுத விவகாரத்தில் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம்” என்று கூறியுள்ளார்.
இந்த திடீர் நிபந்தனையால், மேற்கத்திய நாடுகள் தங்களது பொருளாதார தடைகளை விலக்கிக் கொண்டு இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா அல்லது ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட போகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment