Friday, April 10, 2015

On Friday, April 10, 2015 by Unknown in ,    
ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் நீக்கினால்தான், இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என வல்லரசு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
 
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவதாக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. மேலும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.
 

 
இது தவிர, மேற்கத்திய நாடுகள் ஈரானின் அணுசக்தி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
 
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹஸன் ரௌஹானி நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆற்றிய உரையில், ‘‘ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் அகற்றினால்தான் அணு ஆயுத விவகாரத்தில் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம்” என்று கூறியுள்ளார்.
 
இந்த திடீர் நிபந்தனையால், மேற்கத்திய நாடுகள் தங்களது பொருளாதார தடைகளை விலக்கிக் கொண்டு இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா அல்லது ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட போகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

0 comments: