Friday, April 10, 2015
ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் நீக்கினால்தான், இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என வல்லரசு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவதாக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டின. மேலும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தன.

இது தவிர, மேற்கத்திய நாடுகள் ஈரானின் அணுசக்தி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த 2ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹஸன் ரௌஹானி நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆற்றிய உரையில், ‘‘ஈரான் மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் அகற்றினால்தான் அணு ஆயுத விவகாரத்தில் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவோம்” என்று கூறியுள்ளார்.
இந்த திடீர் நிபந்தனையால், மேற்கத்திய நாடுகள் தங்களது பொருளாதார தடைகளை விலக்கிக் கொண்டு இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமா அல்லது ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட போகின்றனவா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
0 comments:
Post a Comment