Friday, April 24, 2015
போலி ஆவணங்கள் தயாரித்து டிவிக்கள் வாங்கி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (35). விவசாயி. பொள்ளாச்சி, லட்சுமிபுரம், சிஞ்சுவாடியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (35). ஆட்டோ ஓட்டுநர். வேடசந்தூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (எ) செந்தில்குமார் (32). நெருங்கிய நண்பர்களான இவர்கள் மூவரும் திருப்பூரில் டிவிக்கள் விற்பனை செய்யும் 5 நிறுவனங்களுக்குச் சென்ற அவர்கள் 3 பேரும் 5 நவீன ரக டிவிகள், ஒரு ஃபிரிட்ஜ், ஒரு வாஷிங்மெஷின் என ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை தவணை முறையில் வாங்கியுள்ளனர்.
இதற்காக திருப்பூர், பல்லடம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் உதவியையும் பெற்றுள்ளனர்.
அதற்காக சக்திவேல் பெயரில் ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு விவரங்கள், பான்கார்டு ஆகியவற்றின் போலி நகல்களை கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, தனியார் நிதி நிறுவன மேலாளர் வெங்கடேசன் (38), திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சக்திவேல், ஜெயகுமார் இருவரையும் போலீஸார் ஏற்கெனவே கைது செய்து அவர்களிடமிருந்து 2 டிவி, போலி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை இரவு தலைமறைவாக இருந்த மகேந்திரனை கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து 2 டிவி, வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவிலில் தற்போது கோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக கோவிலை சுற்ற...
0 comments:
Post a Comment