Friday, April 24, 2015
போலி ஆவணங்கள் தயாரித்து டிவிக்கள் வாங்கி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த தாமரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (35). விவசாயி. பொள்ளாச்சி, லட்சுமிபுரம், சிஞ்சுவாடியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (35). ஆட்டோ ஓட்டுநர். வேடசந்தூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (எ) செந்தில்குமார் (32). நெருங்கிய நண்பர்களான இவர்கள் மூவரும் திருப்பூரில் டிவிக்கள் விற்பனை செய்யும் 5 நிறுவனங்களுக்குச் சென்ற அவர்கள் 3 பேரும் 5 நவீன ரக டிவிகள், ஒரு ஃபிரிட்ஜ், ஒரு வாஷிங்மெஷின் என ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை தவணை முறையில் வாங்கியுள்ளனர்.
இதற்காக திருப்பூர், பல்லடம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் உதவியையும் பெற்றுள்ளனர்.
அதற்காக சக்திவேல் பெயரில் ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு விவரங்கள், பான்கார்டு ஆகியவற்றின் போலி நகல்களை கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, தனியார் நிதி நிறுவன மேலாளர் வெங்கடேசன் (38), திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், சக்திவேல், ஜெயகுமார் இருவரையும் போலீஸார் ஏற்கெனவே கைது செய்து அவர்களிடமிருந்து 2 டிவி, போலி ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸார் புதன்கிழமை இரவு தலைமறைவாக இருந்த மகேந்திரனை கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்து 2 டிவி, வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment