Friday, April 24, 2015
கொலை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தபட்ட 5 பேரை திருப்பூர் போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (27). இவர், திருப்பூர் கோவில்வழி பகுதியில் தங்கி, ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், சென்னை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 4 கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, மதுரையைச் சேர்ந்த சொர்ணபுரியப்பன் மகன் கனகராஜ் (30), இவரது நண்பர்கள் வெங்கடேஷ் (34), சிவக்குமார் (45), குண்டு (எ) ராஜேந்திரன் (35) ஆகிய நான்கு பேரும் திருப்பூரில் உள்ள சிலம்பரசன் வீட்டில் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதையடுத்து, வடக்கு காவல் ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீஸார், புதன்கிழமை நள்ளிரவு சிலம்பரசன் மற்றும் அந்த 4 பேரை பிடித்தனர். இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கனகராஜ், சிலம்பரசன் ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற மூவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment