Friday, April 24, 2015
திருப்பூர், : திருப்பூர் மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிகைகளை எடுத்து வருகின்றனர். திருப்பூர் மாநகரில் பல்லடம் சாலை, தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, ஊத்துக்குளி சாலை, அவிநாசி சாலை ஆகியவை முக்கியமானவை.திருப்பூரில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீசார் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அவ்வப்போது அகற்றி வருகின்றனர். விளம்பர பேனர்கள், கட்சி விளம்பரங்கள் உள்ளிட்டவைகளை அகற்றுகின்றனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சாலை குமார் நகர், தாராபுரம் ரோடு உஷா தியட்டர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் முதல் ரயிவே கேட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஊத்துக்குளி வழியாக பெருந்துறை, ஈரோடு செல்லும் பஸ்கள் முதல் ரயில்வே கேட் பஸ்டாப்பில் நின்று செல்லுகின்றன. இதனால அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாப் இடமாற்றத்தால் போக்குவரத்து சீராகும். இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பஸ் ஸ்டாப்களை இடம் மாற்றும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவிநாசி சாலை குமார் நகர், தாராபுரம் ரோடு உஷா தியட்டர், பல்லடம் ரோடு தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் முதல் ரயிவே கேட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை இடமாற்றம் செய்தனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஊத்துக்குளி வழியாக பெருந்துறை, ஈரோடு செல்லும் பஸ்கள் முதல் ரயில்வே கேட் பஸ்டாப்பில் நின்று செல்லுகின்றன. இதனால அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பஸ் ஸ்டாப் இடமாற்றத்தால் போக்குவரத்து சீராகும். இவ்வாறு தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment