Friday, April 24, 2015
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேதி) பொது விசாரணை இயக்கம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்டக்குழுவின் சாவித்திரி கூறியுள்ளதாவது: தமிழகத்தில் குடிபோதை கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 44 மாத காலத்தில் மட்டும் 4 ஆயிரத்து 697 பாலியல் வன்குற்றங்கள், 79 ஆயிரத்து 305 கொள்ளைகள், 7 ஆயிரத்து 805 கொலைகள் நடந்துள்ளன. இந்த குற்றங்களுக்கு பின்புலமாக குடிப்பழக்கம் இருந்துள்ளது. அரசு, டாஸ்மாக் மதுபான விற்பனை இலக்கை ஆண்டுக்கு ஆண்டு பல ஆயிரம் கோடியாக அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.26 ஆயிரம் கோடி சாராய விற்பனை மூலம் அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது.
13 வயது சிறார்களையும் குடிகாரர்களாக மாற்றும் அரசாக உள்ளது. இந்த நிலையில் மது இல்லாத, குடி இல்லாத சமூகம் வேண்டும் என்பது பல குடும்பங்களின் கனவாக உள்ளது. இதற்கு முதற் கட்டமாக குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், இந்த பொது விசாரணை இயக்கம் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 24ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு அனுப்பர்பாளையம் புதூர் வெங்கடேசா திருமண மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்வில் மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் முத்துக்கண்ணன், மனநல ஆலோசகர் எம்.வாசுகி, லிட்டில் கிங் டம் நிர்வாகி ஹேமா தேவராஜன், சட்ட உதவி மன்றத் தலைவர் வழக்கறிஞர் வை.ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மதுபோதை கலாசாரத்தை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதி, ஆறு, குளம் நீர்நிலைகள், தேசிய, மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றவும், பகல் நேரங்களில் மதுக்கடைகளை மூடவும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யத் தடை விதிக்கவும், அரசே மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தவும் இந்த இயக்கத்தில் வலியுறுத்தப்படும். இவ்வாறு சாவித்திரி கூறியுள்ளார்.
13 வயது சிறார்களையும் குடிகாரர்களாக மாற்றும் அரசாக உள்ளது. இந்த நிலையில் மது இல்லாத, குடி இல்லாத சமூகம் வேண்டும் என்பது பல குடும்பங்களின் கனவாக உள்ளது. இதற்கு முதற் கட்டமாக குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், இந்த பொது விசாரணை இயக்கம் நடத்தப்படுகிறது. ஏப்ரல் 24ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு அனுப்பர்பாளையம் புதூர் வெங்கடேசா திருமண மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்வில் மாதர் சங்க அகில இந்தியத் துணைத் தலைவர் உ.வாசுகி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் முத்துக்கண்ணன், மனநல ஆலோசகர் எம்.வாசுகி, லிட்டில் கிங் டம் நிர்வாகி ஹேமா தேவராஜன், சட்ட உதவி மன்றத் தலைவர் வழக்கறிஞர் வை.ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மதுபோதை கலாசாரத்தை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடை வீதி, ஆறு, குளம் நீர்நிலைகள், தேசிய, மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை அகற்றவும், பகல் நேரங்களில் மதுக்கடைகளை மூடவும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யத் தடை விதிக்கவும், அரசே மது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தவும் இந்த இயக்கத்தில் வலியுறுத்தப்படும். இவ்வாறு சாவித்திரி கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
பொள்ளாச்சி பகுதியில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங் கள், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங் களி...
-
புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்...
-
CANPAL ACTIHITY AINBOF ALL INDIA GENERAL SECRETARY GV.MANINARAN DIRECTED TO ...
-
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ...
-
திருப்பூரில் பனியன் வியாபாரியின் முகத்தில் மிளகாய்பொடி தூவி ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வர...
-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உளளாட்சி தேர்தல் 2020 க்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் ...
-
திருப்பூர், : ஊத்துக்குளி வட்டம் கவுண்டம்பாளையத்தில் சாயக் கழிவு நீரை வெளியோற்றி விவசாய நிலத்தை பாதிப்படைச் செய்து வரும் பனியன் நிறுவனத்தை ...
0 comments:
Post a Comment