Wednesday, April 22, 2015
திருப்பூர் வருமானவரி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வரி செலுத்தும் சிறப்பு சேவை மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
சிறப்பு வரி செலுத்தும் மைய திறப்பு விழாவிற்கு முதன்மை ஆணையர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதன்மை ஆணையர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். வருமான வரித் துறை முதன்மை ஆணையர் கே.கே.மிஸ்ரா சேவை மையத்தை திறந்து வைத்து பேசியது:
வரி செலுத்துவோரின் நலனுக்காக திருப்பூரில் சிறப்பு சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.633.94 கோடி மொத்த வரித்தொகை வசூல் செய்யப்பட்டது. 2014-15ம் ஆண்டில் வரி வசூல் ரூ.782.74 கோடியாக உயர்ந்துள்ளது. வரி செலுத்துவோருக்கு திரும்ப வழங்கும் "ரீபண்ட்' தொகை, கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.69.55 கோடியாக இருந்தது. 2014-2015ம் ஆண்டில் ரூ.91 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-15ம் ஆண்டின் நிகர வரி வசூல் ரூ.564.39 கோடியில் இருந்து ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது.
இது 22.4 சதவீத வளர்ச்சியாகும். மொத்த வரி வசூல் இலக்கு ரூ.676.63 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயித்த இலக்கைவிட ரூ.14.21 கோடி அதிகமாக வசூலாகி ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது. கோவையைவிட திருப்பூர் பகுதியில் வரி செலுத்தும் பணிகள் நிறைவாக நடந்துள்ளன என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
விடிய விடிய பெய்த மழையால் பல வீடுகளில் முன்புறம் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. திருப்பூர் நகரில் மைய...
0 comments:
Post a Comment