Wednesday, April 22, 2015
திருப்பூர் வருமானவரி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வரி செலுத்தும் சிறப்பு சேவை மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
சிறப்பு வரி செலுத்தும் மைய திறப்பு விழாவிற்கு முதன்மை ஆணையர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதன்மை ஆணையர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். வருமான வரித் துறை முதன்மை ஆணையர் கே.கே.மிஸ்ரா சேவை மையத்தை திறந்து வைத்து பேசியது:
வரி செலுத்துவோரின் நலனுக்காக திருப்பூரில் சிறப்பு சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.633.94 கோடி மொத்த வரித்தொகை வசூல் செய்யப்பட்டது. 2014-15ம் ஆண்டில் வரி வசூல் ரூ.782.74 கோடியாக உயர்ந்துள்ளது. வரி செலுத்துவோருக்கு திரும்ப வழங்கும் "ரீபண்ட்' தொகை, கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.69.55 கோடியாக இருந்தது. 2014-2015ம் ஆண்டில் ரூ.91 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-15ம் ஆண்டின் நிகர வரி வசூல் ரூ.564.39 கோடியில் இருந்து ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது.
இது 22.4 சதவீத வளர்ச்சியாகும். மொத்த வரி வசூல் இலக்கு ரூ.676.63 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயித்த இலக்கைவிட ரூ.14.21 கோடி அதிகமாக வசூலாகி ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது. கோவையைவிட திருப்பூர் பகுதியில் வரி செலுத்தும் பணிகள் நிறைவாக நடந்துள்ளன என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
0 comments:
Post a Comment