Wednesday, April 22, 2015
திருப்பூர் வருமானவரி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வரி செலுத்தும் சிறப்பு சேவை மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
சிறப்பு வரி செலுத்தும் மைய திறப்பு விழாவிற்கு முதன்மை ஆணையர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதன்மை ஆணையர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். வருமான வரித் துறை முதன்மை ஆணையர் கே.கே.மிஸ்ரா சேவை மையத்தை திறந்து வைத்து பேசியது:
வரி செலுத்துவோரின் நலனுக்காக திருப்பூரில் சிறப்பு சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.633.94 கோடி மொத்த வரித்தொகை வசூல் செய்யப்பட்டது. 2014-15ம் ஆண்டில் வரி வசூல் ரூ.782.74 கோடியாக உயர்ந்துள்ளது. வரி செலுத்துவோருக்கு திரும்ப வழங்கும் "ரீபண்ட்' தொகை, கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.69.55 கோடியாக இருந்தது. 2014-2015ம் ஆண்டில் ரூ.91 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-15ம் ஆண்டின் நிகர வரி வசூல் ரூ.564.39 கோடியில் இருந்து ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது.
இது 22.4 சதவீத வளர்ச்சியாகும். மொத்த வரி வசூல் இலக்கு ரூ.676.63 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயித்த இலக்கைவிட ரூ.14.21 கோடி அதிகமாக வசூலாகி ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது. கோவையைவிட திருப்பூர் பகுதியில் வரி செலுத்தும் பணிகள் நிறைவாக நடந்துள்ளன என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...
0 comments:
Post a Comment