Wednesday, April 22, 2015
திருப்பூர் வருமானவரி அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வரி செலுத்தும் சிறப்பு சேவை மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
சிறப்பு வரி செலுத்தும் மைய திறப்பு விழாவிற்கு முதன்மை ஆணையர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதன்மை ஆணையர் வசந்தகுமார் முன்னிலை வகித்தார். வருமான வரித் துறை முதன்மை ஆணையர் கே.கே.மிஸ்ரா சேவை மையத்தை திறந்து வைத்து பேசியது:
வரி செலுத்துவோரின் நலனுக்காக திருப்பூரில் சிறப்பு சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.633.94 கோடி மொத்த வரித்தொகை வசூல் செய்யப்பட்டது. 2014-15ம் ஆண்டில் வரி வசூல் ரூ.782.74 கோடியாக உயர்ந்துள்ளது. வரி செலுத்துவோருக்கு திரும்ப வழங்கும் "ரீபண்ட்' தொகை, கடந்த 2013-14ம் ஆண்டில் ரூ.69.55 கோடியாக இருந்தது. 2014-2015ம் ஆண்டில் ரூ.91 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-15ம் ஆண்டின் நிகர வரி வசூல் ரூ.564.39 கோடியில் இருந்து ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது.
இது 22.4 சதவீத வளர்ச்சியாகும். மொத்த வரி வசூல் இலக்கு ரூ.676.63 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயித்த இலக்கைவிட ரூ.14.21 கோடி அதிகமாக வசூலாகி ரூ.690.84 கோடியாக உயர்ந்துள்ளது. கோவையைவிட திருப்பூர் பகுதியில் வரி செலுத்தும் பணிகள் நிறைவாக நடந்துள்ளன என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment