Wednesday, April 22, 2015
திருப்பூரில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, இறந்தவரின் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). கூலித் தொழிலாளியான இவர் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நீண்டநேரமாகியும் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர்.
இந் நிலையில், திருப்பூர் பெரிச்சிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு இளைஞர் தலையில் பலத்த காயங்களுடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், அவர் கூலித்தொழிலாளி மாரிமுத்து எனத் தெரியவந்தது. அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கோவைக்கு செல்லும் வழியிலேயே மாரிமுத்து இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், மாரிமுத்து தனது வீட்டின் அருகில் வசிக்கும் கண்ணனுடன் (41)ஞாயிற்றுக்கிழமை மது அருந்தினாராம். அப்போது இருவருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, மாரிமுத்துவை கண்ணன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, திருப்பூர் தெற்கு போலீஸார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, கண்ணனை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...
0 comments:
Post a Comment