Wednesday, April 22, 2015
திருப்பூரில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, இறந்தவரின் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). கூலித் தொழிலாளியான இவர் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நீண்டநேரமாகியும் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர், உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர்.
இந் நிலையில், திருப்பூர் பெரிச்சிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு இளைஞர் தலையில் பலத்த காயங்களுடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், அவர் கூலித்தொழிலாளி மாரிமுத்து எனத் தெரியவந்தது. அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கோவைக்கு செல்லும் வழியிலேயே மாரிமுத்து இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில், மாரிமுத்து தனது வீட்டின் அருகில் வசிக்கும் கண்ணனுடன் (41)ஞாயிற்றுக்கிழமை மது அருந்தினாராம். அப்போது இருவருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, மாரிமுத்துவை கண்ணன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, திருப்பூர் தெற்கு போலீஸார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, கண்ணனை கைது செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
0 comments:
Post a Comment