Wednesday, April 22, 2015
திருப்பூர் 6வது வார்டு தெற்கு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக வருவதில்லை எனக் கூறி, அப் பகுதி மக்கள் முதலாம் மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முடிவு செய்தனர். இதையடுத்து, பொதுமக்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
6ஆவது வார்டு கருப்பராயன் கோவில் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, குப்பன்னகவுண்டர் வீதி உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜேந்திரன் தலைமையில் அப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், இணை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் அனுப்பர்பாளையம்புதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன் திரண்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் சேகர், முன்னாள் கவுன்சிலர் ஏ.சி சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: 3 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஒரு வாரத்துக்குள் தேவையான அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
0 comments:
Post a Comment