Wednesday, April 22, 2015
திருப்பூர் 6வது வார்டு தெற்கு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக வருவதில்லை எனக் கூறி, அப் பகுதி மக்கள் முதலாம் மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முடிவு செய்தனர். இதையடுத்து, பொதுமக்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
6ஆவது வார்டு கருப்பராயன் கோவில் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, குப்பன்னகவுண்டர் வீதி உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜேந்திரன் தலைமையில் அப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், இணை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் அனுப்பர்பாளையம்புதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன் திரண்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் சேகர், முன்னாள் கவுன்சிலர் ஏ.சி சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: 3 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஒரு வாரத்துக்குள் தேவையான அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...
0 comments:
Post a Comment