Wednesday, April 22, 2015
திருப்பூர் 6வது வார்டு தெற்கு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக வருவதில்லை எனக் கூறி, அப் பகுதி மக்கள் முதலாம் மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முடிவு செய்தனர். இதையடுத்து, பொதுமக்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
6ஆவது வார்டு கருப்பராயன் கோவில் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, குப்பன்னகவுண்டர் வீதி உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜேந்திரன் தலைமையில் அப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், இணை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் அனுப்பர்பாளையம்புதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன் திரண்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் சேகர், முன்னாள் கவுன்சிலர் ஏ.சி சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: 3 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஒரு வாரத்துக்குள் தேவையான அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment