Wednesday, April 22, 2015
திருப்பூர் 6வது வார்டு தெற்கு பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக வருவதில்லை எனக் கூறி, அப் பகுதி மக்கள் முதலாம் மண்டல அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முடிவு செய்தனர். இதையடுத்து, பொதுமக்களிடம் மாநகராட்சி அலுவலர்கள் குறைகளை கேட்டறிந்தனர்.
6ஆவது வார்டு கருப்பராயன் கோவில் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, குப்பன்னகவுண்டர் வீதி உள்ளிட்ட தெற்கு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி.ராஜேந்திரன் தலைமையில் அப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், இணை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் அனுப்பர்பாளையம்புதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அலுவலகம் முன் திரண்டிருந்த மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்தப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் சேகர், முன்னாள் கவுன்சிலர் ஏ.சி சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், மாநகராட்சி அலுவலர்கள் கூறியது: 3 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். ஒரு வாரத்துக்குள் தேவையான அடிப்படை வசதிகள் செய்துத் தரப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
0 comments:
Post a Comment