Wednesday, April 22, 2015
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் எள் அறுவடை துவங்கியுள்ளது.
முக்கிய எண்ணெய் வித்துப் பயிரான எள், குறைந்த நீரில் விளைந்து, நல்ல மகசூல் தரக் கூடியது. பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்தில் மாதம் ஒருமுறை தண்ணீர் விடப்பட்டதால், மானாவாரி நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் எள் சாகுபடி செய்தனர்.
கடந்த தை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள், தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. விதைப்பு சமயத்தில் ஒரு கிலோ ரூ. 130 விற்கப்பட்டது. தற்போது அறுவடை சீசன் துவங்கி உள்ளதால், விலை சரிந்து கிலோ ரூ.90க்கு விற்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் எள்ளில் பெரும்பகுதி காங்கயம், ஈரோடு பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
குறைந்த அளவிலான எள் மட்டுமே இனிப்பு மிட்டாய் மற்றும் பிற தயாரிப்பு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. எள் சாகுபடிக்கு பூச்சி மருந்து, உரம் போன்றவை தேவைப்படாது என்பதால், விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படாது. இந்தாண்டு வெங்காயம் பயிரிட்டு பலர் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், எள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment