Wednesday, April 22, 2015
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் எள் அறுவடை துவங்கியுள்ளது.
முக்கிய எண்ணெய் வித்துப் பயிரான எள், குறைந்த நீரில் விளைந்து, நல்ல மகசூல் தரக் கூடியது. பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்தில் மாதம் ஒருமுறை தண்ணீர் விடப்பட்டதால், மானாவாரி நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் எள் சாகுபடி செய்தனர்.
கடந்த தை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள், தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. விதைப்பு சமயத்தில் ஒரு கிலோ ரூ. 130 விற்கப்பட்டது. தற்போது அறுவடை சீசன் துவங்கி உள்ளதால், விலை சரிந்து கிலோ ரூ.90க்கு விற்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் எள்ளில் பெரும்பகுதி காங்கயம், ஈரோடு பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
குறைந்த அளவிலான எள் மட்டுமே இனிப்பு மிட்டாய் மற்றும் பிற தயாரிப்பு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. எள் சாகுபடிக்கு பூச்சி மருந்து, உரம் போன்றவை தேவைப்படாது என்பதால், விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படாது. இந்தாண்டு வெங்காயம் பயிரிட்டு பலர் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், எள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு ப...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அசரப் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் மைதீன் அப்துல் காதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று ஆட்...
0 comments:
Post a Comment