Wednesday, April 22, 2015
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் எள் அறுவடை துவங்கியுள்ளது.
முக்கிய எண்ணெய் வித்துப் பயிரான எள், குறைந்த நீரில் விளைந்து, நல்ல மகசூல் தரக் கூடியது. பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்தில் மாதம் ஒருமுறை தண்ணீர் விடப்பட்டதால், மானாவாரி நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் எள் சாகுபடி செய்தனர்.
கடந்த தை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள், தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. விதைப்பு சமயத்தில் ஒரு கிலோ ரூ. 130 விற்கப்பட்டது. தற்போது அறுவடை சீசன் துவங்கி உள்ளதால், விலை சரிந்து கிலோ ரூ.90க்கு விற்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் எள்ளில் பெரும்பகுதி காங்கயம், ஈரோடு பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
குறைந்த அளவிலான எள் மட்டுமே இனிப்பு மிட்டாய் மற்றும் பிற தயாரிப்பு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. எள் சாகுபடிக்கு பூச்சி மருந்து, உரம் போன்றவை தேவைப்படாது என்பதால், விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படாது. இந்தாண்டு வெங்காயம் பயிரிட்டு பலர் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், எள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment