Wednesday, April 22, 2015
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் எள் அறுவடை துவங்கியுள்ளது.
முக்கிய எண்ணெய் வித்துப் பயிரான எள், குறைந்த நீரில் விளைந்து, நல்ல மகசூல் தரக் கூடியது. பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்தில் மாதம் ஒருமுறை தண்ணீர் விடப்பட்டதால், மானாவாரி நிலங்களை வைத்துள்ள விவசாயிகள் எள் சாகுபடி செய்தனர்.
கடந்த தை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட எள், தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. விதைப்பு சமயத்தில் ஒரு கிலோ ரூ. 130 விற்கப்பட்டது. தற்போது அறுவடை சீசன் துவங்கி உள்ளதால், விலை சரிந்து கிலோ ரூ.90க்கு விற்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் எள்ளில் பெரும்பகுதி காங்கயம், ஈரோடு பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
குறைந்த அளவிலான எள் மட்டுமே இனிப்பு மிட்டாய் மற்றும் பிற தயாரிப்பு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது. எள் சாகுபடிக்கு பூச்சி மருந்து, உரம் போன்றவை தேவைப்படாது என்பதால், விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படாது. இந்தாண்டு வெங்காயம் பயிரிட்டு பலர் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், எள் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
0 comments:
Post a Comment