Tuesday, April 21, 2015
திருப்பூரில் போலீஸாக நடித்து, நகையை வழிப்பறி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், குமாரானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (33). இவர், பி.என்.சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து, அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தன்னை போலீஸ் எனக் கூறி, இப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக சிவனிடம் கூறியுள்ளார்.
அந்த நபர், சிவன் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கலி, அரைப் பவுன் மோதிரம் ஆகியவற்றை வாங்கி, ஒரு பிளாஸ்டிக் பையில் மடித்து, அதை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுமாறு கூறி, சிவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய சிவன், பிளாஸ்டிக் பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் நகைகள் இல்லை எனத் தெரியவந்தது.
போலீஸாக நடித்து தன்னிடம் நகைகள் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சிவன், திருப்பூர் வடக்கு போலீஸில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
சென்னை, செப். 29– சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பையடு...
0 comments:
Post a Comment