Tuesday, April 21, 2015
திருப்பூரில் போலீஸாக நடித்து, நகையை வழிப்பறி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர், குமாரானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (33). இவர், பி.என்.சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து, அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தன்னை போலீஸ் எனக் கூறி, இப்பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக சிவனிடம் கூறியுள்ளார்.
அந்த நபர், சிவன் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கலி, அரைப் பவுன் மோதிரம் ஆகியவற்றை வாங்கி, ஒரு பிளாஸ்டிக் பையில் மடித்து, அதை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுமாறு கூறி, சிவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய சிவன், பிளாஸ்டிக் பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் நகைகள் இல்லை எனத் தெரியவந்தது.
போலீஸாக நடித்து தன்னிடம் நகைகள் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சிவன், திருப்பூர் வடக்கு போலீஸில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment