Tuesday, April 21, 2015
திருப்பூர் தெற்கு மாநகரப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால் தலைமை வகித்தார், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர் பாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுந்தரம் உள்ளிட்டோர் மாநகராட்சியைக் கண்டித்துப் பேசினர்.
இதில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மர்மக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், குடிநீரை தேக்கி வைக்கக் கூடாது என்பதற்காக 6 நாள்களுக்கு ஒரு முறை 2 மணி நேரம் விநியோகிக்கப்பட்ட குடிநீரை, 3 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் விநியோகிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலன வார்டுகளில் 6 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அனைத்து வார்டுகளிலும் ஒருநாள் விட்டு அடுத்த நாள் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர்த் திட்ட குழாய்களை விரிவுபடுத்தி கூடுதலாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரை அனைத்துப் பகுதியிலும் முறையாக விநியோகிக்க வேண்டும். புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகயை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். சாக்கடைக் கால்வாயில் கழிவுநீர் தேங்காதவாறு, உடனுக்குடன் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, கள்ளம்பாளையம் உள்ளிட்ட தெற்கு மாநகரப் பகுதிகளைச் சேர்ந்த 50 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment