Tuesday, April 21, 2015
திருப்பூர் தெற்கு மாநகரப் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால் தலைமை வகித்தார், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர் பாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சுந்தரம் உள்ளிட்டோர் மாநகராட்சியைக் கண்டித்துப் பேசினர்.
இதில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மர்மக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில், குடிநீரை தேக்கி வைக்கக் கூடாது என்பதற்காக 6 நாள்களுக்கு ஒரு முறை 2 மணி நேரம் விநியோகிக்கப்பட்ட குடிநீரை, 3 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் விநியோகிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலன வார்டுகளில் 6 தினங்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் கிடைக்கிறது. குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அனைத்து வார்டுகளிலும் ஒருநாள் விட்டு அடுத்த நாள் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர்த் திட்ட குழாய்களை விரிவுபடுத்தி கூடுதலாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரை அனைத்துப் பகுதியிலும் முறையாக விநியோகிக்க வேண்டும். புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகயை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். சாக்கடைக் கால்வாயில் கழிவுநீர் தேங்காதவாறு, உடனுக்குடன் தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, கள்ளம்பாளையம் உள்ளிட்ட தெற்கு மாநகரப் பகுதிகளைச் சேர்ந்த 50 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
0 comments:
Post a Comment