Thursday, April 30, 2015
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாநகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பி.கோபால்சாமி, வெள்ளியங்கிரி, பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நீதி விசாரணை நடத்த வேண்டும். அதில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கூடுதலாகக் கல்விக் கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணாமல், காலதாமதம் செய்து வரும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில், ஊத்துக்குளி சாலை டி.எம்.எப். மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு
உடனடியாக நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். மே 2-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள, தமிக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கும் பேரணியில், திருப்பூரில் இருந்து கட்சியினர் திரளாகப் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சிப் பொறுப்பாளர் வி.ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment