Thursday, April 30, 2015
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாநகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பி.கோபால்சாமி, வெள்ளியங்கிரி, பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நீதி விசாரணை நடத்த வேண்டும். அதில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கூடுதலாகக் கல்விக் கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணாமல், காலதாமதம் செய்து வரும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில், ஊத்துக்குளி சாலை டி.எம்.எப். மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு
உடனடியாக நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். மே 2-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள, தமிக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கும் பேரணியில், திருப்பூரில் இருந்து கட்சியினர் திரளாகப் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சிப் பொறுப்பாளர் வி.ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி 14.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழக நாட...
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். என முஸ்லிம் லீக...
-
சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். வுளமான மண் இருந்தால் தான் நிலையான ம...
-
திருச்சி 14.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியி ; ல் டாக்டர் . அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரிஸ்டோ ரவுண...
-
திருச்சி 11.12.15 திருச்சி உங்களுடன் அமைப்பு சார்பாக இன்று ஊர்காவல் படை ரோட்டரி இன்னர்வீல் லயன்எக்ஸ்னோரா தமிழ்நாடு வியாபாரிகள் சங...
-
வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது கடந்த 23.11.2015 அன்று பெய்த கனமழையின் காரணமாக தூத்து...
-
கத்தி படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதம் வெளிவருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், தற்போது படத்தின் பாடல்கள் குறித்து தனுஷ் ஒரு ...
-
நடிகர் மனோபாலா தயாரிப்பில், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ள படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் டிரைலரை இளையதளபதி வி...
-
திருப்பூர் :குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், திருப்பூரில் இன்று (24ம் தேத...
0 comments:
Post a Comment