Thursday, April 30, 2015
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாநகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பி.கோபால்சாமி, வெள்ளியங்கிரி, பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நீதி விசாரணை நடத்த வேண்டும். அதில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கூடுதலாகக் கல்விக் கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணாமல், காலதாமதம் செய்து வரும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில், ஊத்துக்குளி சாலை டி.எம்.எப். மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு
உடனடியாக நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். மே 2-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள, தமிக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கும் பேரணியில், திருப்பூரில் இருந்து கட்சியினர் திரளாகப் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சிப் பொறுப்பாளர் வி.ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
0 comments:
Post a Comment