Thursday, April 30, 2015
தாராபுரம் நகர்மன்றக் கூட்டத்தில், 28-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் வெ.கமலக்கண்ணனை பதவி இழப்பு செய்து புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாராபுரம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் ஞா.கலாவதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ், ஆணையர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நகர்மன்றத் தலைவர் பேசியது:
நகராட்சியின் 28-ஆவது வார்டு கவுன்சிலராகப் பதவி வகித்து வரும் திமுக உறுப்பினர் வெ.கமலக்கண்ணன் மன்ற விதிமுறைகளுக்கு மாறாக, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை தனது பெயரில் ஏலம் எடுத்துள்ளார்.
இது குறித்து நகராட்சி வழக்குரைஞரிடம் சட்டப்படியான கருத்துரு கேட்கப்பட்டதில், கமலக்கண்ணன் நகராட்சி விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட காரணத்தால், அவரை பதவி இழப்பு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து கவுன்சிலர்கள் முடிவு செய்யலாம்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் இது குறித்து பின்னர் முடிவு செய்யலாம் என திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெ.கமலக்கண்ணனை பதவி இழப்பு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment