Thursday, April 30, 2015
தாராபுரம் நகர்மன்றக் கூட்டத்தில், 28-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் வெ.கமலக்கண்ணனை பதவி இழப்பு செய்து புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாராபுரம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் ஞா.கலாவதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ், ஆணையர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நகர்மன்றத் தலைவர் பேசியது:
நகராட்சியின் 28-ஆவது வார்டு கவுன்சிலராகப் பதவி வகித்து வரும் திமுக உறுப்பினர் வெ.கமலக்கண்ணன் மன்ற விதிமுறைகளுக்கு மாறாக, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை தனது பெயரில் ஏலம் எடுத்துள்ளார்.
இது குறித்து நகராட்சி வழக்குரைஞரிடம் சட்டப்படியான கருத்துரு கேட்கப்பட்டதில், கமலக்கண்ணன் நகராட்சி விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட காரணத்தால், அவரை பதவி இழப்பு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து கவுன்சிலர்கள் முடிவு செய்யலாம்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் இது குறித்து பின்னர் முடிவு செய்யலாம் என திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெ.கமலக்கண்ணனை பதவி இழப்பு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
ஆப்கானிஸ்தானில் பிப்ரவரி மாதம் பேருந்தில் இருந்த 31 பயணிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் தாங்கள் பிடித்துச் சென்றவர்களில் ஒருவரை முகமூடியணி...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...

0 comments:
Post a Comment