Thursday, April 30, 2015
தாராபுரம் நகர்மன்றக் கூட்டத்தில், 28-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் வெ.கமலக்கண்ணனை பதவி இழப்பு செய்து புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாராபுரம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் ஞா.கலாவதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ், ஆணையர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நகர்மன்றத் தலைவர் பேசியது:
நகராட்சியின் 28-ஆவது வார்டு கவுன்சிலராகப் பதவி வகித்து வரும் திமுக உறுப்பினர் வெ.கமலக்கண்ணன் மன்ற விதிமுறைகளுக்கு மாறாக, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை தனது பெயரில் ஏலம் எடுத்துள்ளார்.
இது குறித்து நகராட்சி வழக்குரைஞரிடம் சட்டப்படியான கருத்துரு கேட்கப்பட்டதில், கமலக்கண்ணன் நகராட்சி விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட காரணத்தால், அவரை பதவி இழப்பு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து கவுன்சிலர்கள் முடிவு செய்யலாம்.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் இது குறித்து பின்னர் முடிவு செய்யலாம் என திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் வெ.கமலக்கண்ணனை பதவி இழப்பு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment