Friday, April 17, 2015
உடுமலையை அடுத்துள்ள கொங்கல் நகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக குடிமங்கலம் ஒன்றிய பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்துப் பேசியது:
கொங்கல் நகரம் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக பல்வேறு முறை கேடுகள் நடைபெற்றுள்ளன. பயிர், நகைக் கடன்கள் வழங்குவதில் முன்னுக்குப் பின் முரணாக கணக்குகள் எழுதப்பட்டுள்ளன. மேலும், இங்கு அடமானம் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள் வேறு கூட்டுறவுச் சங்கத்தில் மறு அடமானம் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த சில வருடங்களில் மட்டும் ரூ. 10 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுச் சங்க உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பணத்தை மீட்டுத் தரவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்தவும் தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்றார்.  
ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் விஜயராகவன், நிர்வாகிகள் வடுகநாதன், செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
- 
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
- 
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
- 
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
- 
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
 
 
 
 
 
 
 
0 comments:
Post a Comment