Friday, April 17, 2015
உடுமலையை அடுத்துள்ள கொங்கல் நகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக குடிமங்கலம் ஒன்றிய பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்துப் பேசியது:
கொங்கல் நகரம் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக பல்வேறு முறை கேடுகள் நடைபெற்றுள்ளன. பயிர், நகைக் கடன்கள் வழங்குவதில் முன்னுக்குப் பின் முரணாக கணக்குகள் எழுதப்பட்டுள்ளன. மேலும், இங்கு அடமானம் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள் வேறு கூட்டுறவுச் சங்கத்தில் மறு அடமானம் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த சில வருடங்களில் மட்டும் ரூ. 10 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுச் சங்க உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பணத்தை மீட்டுத் தரவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்தவும் தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் விஜயராகவன், நிர்வாகிகள் வடுகநாதன், செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment