Friday, April 17, 2015
உடுமலையை அடுத்துள்ள கொங்கல் நகரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உடுமலையை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக குடிமங்கலம் ஒன்றிய பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்துப் பேசியது:
கொங்கல் நகரம் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக பல்வேறு முறை கேடுகள் நடைபெற்றுள்ளன. பயிர், நகைக் கடன்கள் வழங்குவதில் முன்னுக்குப் பின் முரணாக கணக்குகள் எழுதப்பட்டுள்ளன. மேலும், இங்கு அடமானம் வைக்கப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகள் வேறு கூட்டுறவுச் சங்கத்தில் மறு அடமானம் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் கடந்த சில வருடங்களில் மட்டும் ரூ. 10 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, கூட்டுறவுச் சங்க உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் பணத்தை மீட்டுத் தரவும், இதுகுறித்து நீதி விசாரணை நடத்தவும் தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் விஜயராகவன், நிர்வாகிகள் வடுகநாதன், செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment