Monday, May 04, 2015
உடுமலை நகரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
உடுமலையில் ரூ. 56 கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டம், ரூ. 31 கோடி மதிப்பில் மூன்றாவது குடிநீர் திட்டம், ரூ. 2 கோடி செலவில் நகர்மன்ற அலுவலக கட்டடம், ரூ. 3 கோடி மதிப்பில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர, உடுமலை நகரை நவீன நகரமாக மாற்றும் திட்டத்திற்காக, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு கோரி முன்மொழிவுகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடைபெற்று வரும் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ஜி.பிரகாஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
குட்டைத் திடல்: நகரின் மையப் பகுதியில் உள்ள குட்டைத் திடலை வருவாய்த் துறையிடமிருந்து, நகராட்சியின் பெயருக்கு மாற்றி, நவீன பூங்கா அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டது.
தங்கம்மாள் ஓடை: தங்கம்மாள் ஓடையில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துவிடுவதால், அதன் இரு கரையோரங்களிலும் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை: ஏரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும், பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
100 அடி திட்டச் சாலை: திருப்பூர் சாலை-மத்திய பேருந்து நிலையம் வரையிலான 100 அடி திட்டச் சாலையை இக்குழுவினர் ஆய்வு செய்து, அதற்கு நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
5 ஏக்கரில் நவீன பூங்கா: சிவசக்தி காலனியில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழைய குப்பைக் கிடங்கு பகுதியை நவீன பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய விரிவாக்கம்: பேருந்து நிலையத்தில் உள்ள வாடகைக் கார்களை வேறு இடத்துக்கு மாற்றி, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வாரச் சந்தையை விரிவாக்கம் செய்யவும், நேதாஜி மைதானத்தில் ஸ்கேட்டிங் மைதானம் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செய்யவும், ராஜேந்திரா சாலையில் உள்ள அண்ணா பூங்காவை நவீன பூங்காவாக மாற்றியமைத்து நீச்சல் குளம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
புறவழிச் சாலை, 3-ஆம் குடிநீர் திட்ட பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன்(பொள்ளாச்சி), கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், நகர்மன்றத் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment