Monday, May 04, 2015
உடுமலை நகரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
உடுமலையில் ரூ. 56 கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டம், ரூ. 31 கோடி மதிப்பில் மூன்றாவது குடிநீர் திட்டம், ரூ. 2 கோடி செலவில் நகர்மன்ற அலுவலக கட்டடம், ரூ. 3 கோடி மதிப்பில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர, உடுமலை நகரை நவீன நகரமாக மாற்றும் திட்டத்திற்காக, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு கோரி முன்மொழிவுகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடைபெற்று வரும் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ஜி.பிரகாஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
குட்டைத் திடல்: நகரின் மையப் பகுதியில் உள்ள குட்டைத் திடலை வருவாய்த் துறையிடமிருந்து, நகராட்சியின் பெயருக்கு மாற்றி, நவீன பூங்கா அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டது.
தங்கம்மாள் ஓடை: தங்கம்மாள் ஓடையில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துவிடுவதால், அதன் இரு கரையோரங்களிலும் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை: ஏரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும், பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
100 அடி திட்டச் சாலை: திருப்பூர் சாலை-மத்திய பேருந்து நிலையம் வரையிலான 100 அடி திட்டச் சாலையை இக்குழுவினர் ஆய்வு செய்து, அதற்கு நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
5 ஏக்கரில் நவீன பூங்கா: சிவசக்தி காலனியில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழைய குப்பைக் கிடங்கு பகுதியை நவீன பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய விரிவாக்கம்: பேருந்து நிலையத்தில் உள்ள வாடகைக் கார்களை வேறு இடத்துக்கு மாற்றி, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வாரச் சந்தையை விரிவாக்கம் செய்யவும், நேதாஜி மைதானத்தில் ஸ்கேட்டிங் மைதானம் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செய்யவும், ராஜேந்திரா சாலையில் உள்ள அண்ணா பூங்காவை நவீன பூங்காவாக மாற்றியமைத்து நீச்சல் குளம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
புறவழிச் சாலை, 3-ஆம் குடிநீர் திட்ட பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன்(பொள்ளாச்சி), கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், நகர்மன்றத் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment