Monday, May 04, 2015
உடுமலை நகரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
உடுமலையில் ரூ. 56 கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டம், ரூ. 31 கோடி மதிப்பில் மூன்றாவது குடிநீர் திட்டம், ரூ. 2 கோடி செலவில் நகர்மன்ற அலுவலக கட்டடம், ரூ. 3 கோடி மதிப்பில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர, உடுமலை நகரை நவீன நகரமாக மாற்றும் திட்டத்திற்காக, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு கோரி முன்மொழிவுகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடைபெற்று வரும் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் ஜி.பிரகாஷ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
குட்டைத் திடல்: நகரின் மையப் பகுதியில் உள்ள குட்டைத் திடலை வருவாய்த் துறையிடமிருந்து, நகராட்சியின் பெயருக்கு மாற்றி, நவீன பூங்கா அமைக்க ஆலோசனை நடத்தப்பட்டது.
தங்கம்மாள் ஓடை: தங்கம்மாள் ஓடையில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துவிடுவதால், அதன் இரு கரையோரங்களிலும் தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாதாளச் சாக்கடை: ஏரிப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும், பாதாளச் சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
100 அடி திட்டச் சாலை: திருப்பூர் சாலை-மத்திய பேருந்து நிலையம் வரையிலான 100 அடி திட்டச் சாலையை இக்குழுவினர் ஆய்வு செய்து, அதற்கு நிதி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
5 ஏக்கரில் நவீன பூங்கா: சிவசக்தி காலனியில் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழைய குப்பைக் கிடங்கு பகுதியை நவீன பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய விரிவாக்கம்: பேருந்து நிலையத்தில் உள்ள வாடகைக் கார்களை வேறு இடத்துக்கு மாற்றி, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், வாரச் சந்தையை விரிவாக்கம் செய்யவும், நேதாஜி மைதானத்தில் ஸ்கேட்டிங் மைதானம் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை செய்யவும், ராஜேந்திரா சாலையில் உள்ள அண்ணா பூங்காவை நவீன பூங்காவாக மாற்றியமைத்து நீச்சல் குளம் அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
புறவழிச் சாலை, 3-ஆம் குடிநீர் திட்ட பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன், மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன்(பொள்ளாச்சி), கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள், நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், நகர்மன்றத் தலைவர் கேஜிஎஸ்.ஷோபனா, துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...

0 comments:
Post a Comment