Monday, May 04, 2015
உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரி வீட்டுக்குள் பட்டப் பகலில் மர்ம நபர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
உடுமலை ரயில் நிலையம் அருகே உள்ள கௌஸ் காலனியைச் சேர்ந்தவர் லாசர் (53). திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குடும்பத்தாருடன் தளி சாலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த அனைத்து நகைகளும் திருடு போனது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், இது குறித்து விசாரித்தனர். மொத்தம் 90 பவுன் நகைகள் திருடுபோனதாகவும், அவற்றின் மதிப்பு ரூ. 22 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். லாசர் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெ...
-
திருச்சி திருவானைக்கோவில் அருகே உள்ள சத்குரு மடம் உள்ளது அதன் தனிச்சிறப்பு அதிசயம் பற்றி கூறியது
0 comments:
Post a Comment