Monday, May 04, 2015
உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரி வீட்டுக்குள் பட்டப் பகலில் மர்ம நபர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
உடுமலை ரயில் நிலையம் அருகே உள்ள கௌஸ் காலனியைச் சேர்ந்தவர் லாசர் (53). திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குடும்பத்தாருடன் தளி சாலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த அனைத்து நகைகளும் திருடு போனது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், இது குறித்து விசாரித்தனர். மொத்தம் 90 பவுன் நகைகள் திருடுபோனதாகவும், அவற்றின் மதிப்பு ரூ. 22 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். லாசர் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment