Monday, May 04, 2015
உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரி வீட்டுக்குள் பட்டப் பகலில் மர்ம நபர்கள் புகுந்து 90 பவுன் நகைகளை ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.
உடுமலை ரயில் நிலையம் அருகே உள்ள கௌஸ் காலனியைச் சேர்ந்தவர் லாசர் (53). திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், உடுமலையில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் குடும்பத்தாருடன் தளி சாலையில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர்கள், வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த அனைத்து நகைகளும் திருடு போனது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், இது குறித்து விசாரித்தனர். மொத்தம் 90 பவுன் நகைகள் திருடுபோனதாகவும், அவற்றின் மதிப்பு ரூ. 22 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். லாசர் அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
.jpg)
0 comments:
Post a Comment