Wednesday, May 06, 2015
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைக்கு பூட்டு போட முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சங்கத்தை சேர்ந்த 17 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருமுருகன்பூண்டி நெடுஞ்சாலையில், பேரூராட்சி அலுவலகம், திருமுருகநாதசுவாமி கோயில், அரசு நடுநிலைப்பள்ளி, நியாயவிலைக் கடை, அரசு மருத்துவமனை, காவல் நிலையம் ஆகியன உள்ளன.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இப்பகுதியில் அரசு மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடைக்கு மது அருந்த வருபவர்களில் பலர், அவ்வழியாக செல்லும் பெண்கள், பள்ளி மாணவிகள் ஆகியோருக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில்,திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி கட்டுமானத் தொழிற்சங்கத்தினர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைக்கு பூட்டுப் போட முயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க துணைச் செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச்செயலாளர் செல்வராஜ், திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி, கட்டட சங்க நகரச் செயலாளர் பூபதி, பொருளாளர் ஆறுமுகம், துணைச்செயலாளர் சுரேஷ், ஏஐடியுசி கட்டுமானச் சங்கப் பொறுப்பாளர்கள் தீபா, ஜெயந்தி, கலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனுமதியின்றி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 10 பெண்கள் உள்பட 17 பேரை கைது செய்த அனுப்பர்பாளையம் போலீஸார் மாலை அவர்களை விடுவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...
0 comments:
Post a Comment