Friday, August 14, 2015

On Friday, August 14, 2015 by Unknown in ,    
விருதுநகர் அருகே சூலக்கரையில் புதிய நூலக கட்டட வளாகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், கூரைக்குண்டு ஊராட்சியை சேர்ந்த சூலக்கரை மேடு பகுதியில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நூலக வளாக திறப்பு விழாவும், நூலகர் தினவிழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலக வளாகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் திறந்து வைத்து, நூல்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கிராமப்பகுதியில் உள்ள 61 நூலகங்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நூல்களையும், நூலகர்களை பாராட்டி பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன், ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா, கூரைக்குண்டு ஊராட்சி தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: