Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in , ,    
தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் அருகே பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இதனை இரவு ஊழியர்கள் வழக்கம் போல் பூட்டிச் சென்றனர். காலையில் வந்து பார்த்த போது, கடையின் 5வது மாடியில்  உள்ள கிாில் கேட் அறுக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு  கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, மத்திய பாகம் காவல்நிலையத்திற்கு தகவல் தொிவிக்கப்பட்டது. மத்திய பாகம் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவு உள்ள நுழைந்த திருடர்கள் கல்லாவில் இருந்த ரூ.79,000-யும், ஒரு புதிய லேட்டாப் ஒன்றை கொள்ளையடித்து சென்றது தொியவந்தது. இரவு நேரத்தில் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், உள்ளே நுழைந்த கொள்ளையர்களை யார் என்று தொியவில்லை. இதுகுறித்து மத்தியபாகம் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

0 comments: