Tuesday, October 13, 2015
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (12.10.2015) தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 100 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 422 புதிய பேரூந்துகள், 18 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, கிராமங்கள் மற்றும் நகர்புறங்கள் விரிவடைந்து வருகின்றன. பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, புதிய பேரூந்து சேவைளை துவக்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடி கிளை சார்பில் 8 பேரூந்துகள், தூத்துக்குடி மண்டலம் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 பேரூந்துகள் என மொத்தம் 20 புதிய பேரூந்துகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய பேரூந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாண்புமிகு மேயர் திருமதி.அ.ப.ரா.அந்தோணி கிரேஸ், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர்.செ.ராஜீ ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் திரு.கே.முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், கோட்ட மேலாளர் திரு.ஜா.ஜெபராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment