Tuesday, October 13, 2015
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (12.10.2015) தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 100 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 422 புதிய பேரூந்துகள், 18 புதிய சிற்றுந்துகள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒரு மாநிலத்தின் முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப, கிராமங்கள் மற்றும் நகர்புறங்கள் விரிவடைந்து வருகின்றன. பொது மக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, புதிய பேரூந்து சேவைளை துவக்கி வைத்தல், புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தூத்துக்குடி கிளை சார்பில் 8 பேரூந்துகள், தூத்துக்குடி மண்டலம் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 12 பேரூந்துகள் என மொத்தம் 20 புதிய பேரூந்துகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய பேரூந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாண்புமிகு மேயர் திருமதி.அ.ப.ரா.அந்தோணி கிரேஸ், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர்.செ.ராஜீ ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் திரு.கே.முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், கோட்ட மேலாளர் திரு.ஜா.ஜெபராஜ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment