Thursday, October 01, 2015
விருதுநகரில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன் புதன்கிழமை வழங்கினார்.
விருதுநகர் கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன் தலைமை
வகித்தார். பள்ளியின் செயலாளர் மதன்மோகன் முன்னிலை வகித்தார். நகராட்சி
தலைவர் மா.சாந்தி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கி.கலாநிதி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்
க.பாண்டியராஜன் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை
வழங்கினார். இதில், நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன், நகர செயலாளர்
முகமதுநயினார், மாவட்ட அவைத் தலைவர் மற்றும் நகராட்சி உறுப்பினர் ஐ.மருது,
நகராட்சி உறுப்பினர்கள் த.அன்னலட்சுமி, தனலட்சுமி, செய்யது இப்ராஹூம்
ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 420 பேருக்கு மடிக்கணினி
வழங்கப்பட்டது. இதேபோல், ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி
மாணவிகள் 433 பேருக்கு, செளடாம்பிகா மாணவ, மாணவிகள் 69 பேருக்கும்,
சத்திரரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 73 பேருக்கும்,
தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 93 பேருக்கும் மொத்தம் 1088
பேருக்கு ரூ.1.47 கோடியில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் பல்லடம் வட்ட பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு நிகழ்ச்சி...
-
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
0 comments:
Post a Comment