Thursday, October 08, 2015

On Thursday, October 08, 2015 by Unknown in ,    
ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாலை சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     விருதுநகர் மண்டல அரசுப் போக்குவரத்து கழக அலுவலகம் வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் போஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வெள்ளைத்துரை ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.     இதில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும. 10 மாத அகவிலைப்படியை வழங்குதல், கழகத்திற்கு அரசு வழங்க வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும், காலாவதியான பேருந்துகளை உடனே மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நிறைவாக மாநில துணைச் செயலாளர் வேலுச்சாமி நன்றி கூறினார்.

0 comments: